செய்திகள் :

பெண்கள் சேவை மையத்தில் சமூகப் பணியாளர், ஐடி உதவியாளர் வேலை!

post image

மத்திய அரசால் முன்மொழியப்பட்ட சிறப்பு திட்டமான சகி(SAKHI) என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

பணி: சமூகப் பணியாளர் (Case Worker)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: சமூகப் பணி, ஆலோசனை, மனநலம், குழந்தைகள், பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதிகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

24 மணிநேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்.

பணி: IT Assistant for Mission Sakthi

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட் டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி, ஐடி-இல் அறிவுத்திறனும், 3 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cuddalore.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர் -607 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.8.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக்அல்லது இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத் துறை வங்கிகளில் 10,277 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Recruitment of SOCIAL WELFARE DEPARTMENT Case Worker and IT ASSISTANT VACANT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

சேலம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இது பற்றிய ... மேலும் பார்க்க

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 230 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள... மேலும் பார்க்க

ரூ.27,804 சம்பளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் வேலை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்களிடம் இரு... மேலும் பார்க்க

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையி... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் கள உதவியாளா்களுடன் 400 உதவிப் பொறியாளா்கள் தோ்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா்களுடன், 400 உதவிப் பொறியாளா்கள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு மின்... மேலும் பார்க்க

மெட்ராஸ் ஐஐடி-இல் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி

சென்னையிலுள்ள மெட்ராஸ் ஐஐடி-இன் இயற்பியல் துறையில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt/122/2025பணி: Junior Resear... மேலும் பார்க்க