ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105
சேலம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
இது பற்றிய விபரம் வருமாறு:
பணி: கிராம உதவியாளர்
காலியிடங்கள்: 105
சம்பளம்: மாதம் ரூ.11,100 - 35,100
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்கும் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி, இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 21-லிருந்து 32-க் குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://salem.nic.in இணையதளத்தில் கொடுக் கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ கீழ்க்கண்டமுகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வட்டாட்சியர் அலுவலகம், சேலம் வட்டம், சேலம் மாவட்டம்.
நேர்முகத்தேர்வு நடை பெறும் நாள்: 6.10.2025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.