செய்திகள் :

உங்கள் பாதங்களைக் கழுவவே கங்கை வெள்ளம்: உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

post image

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், உங்களைப் பாதங்களை கழுவவே கங்கை வெள்ளம் நேரிட்டதாக உத்தரப்பிரதேச அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கான்பூர் தேஹாத் பகுதியில் கடுமையான வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட உத்தரப்பிரதேச மீன்வளத் துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், அங்கிருந்து ஒரு பெண்மணி, வெள்ளம் சூழ்ந்திருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தபோது, கங்கை நீர், உங்கள் பாதங்களைக் கழுவவே வந்திருப்பதாக ஆறுதல் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களின் துயரங்களைப் புரிந்துகொள்ள முடியாமல், இவ்வாறு பேசியிருப்பதற்கு, எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த விடியோவில், ஒரு பெண்மணி, வெள்ளத்தில் நின்று கொண்டிருக்கும்போது, அங்கே வரும் அமைச்சர், உங்களைப் தங்களை கழுவவே, உங்கள் வீட்டுக்கே கங்கை நீர் வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் நேரடியாக சொர்க்கத்துக்கே செல்வீர்கள் என்று கூறுகிறார்.

கடும் வெள்ளத்தால் வீடு உள்ளிட்டவற்றை இழந்து நிர்கதியாக நின்றிருந்த பெண்ணோ, அமைச்சரின் பேச்சைக் கேட்டு அதிருப்தியடைந்து, கங்கையின் ஆசிர்வாதங்களை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதும் அந்த விடியோவில் பதிவாகியிருக்கிறது.

ஆனால், அவர் அந்த பதிலை நேரடியாக அமைச்சரிடமே சொல்கிறாரா அல்லது அருகில் இருந்த பெண்ணிடம் சொல்கிறாரா என்பது தெரியவில்லை.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிஷாத் கட்சியின் தலைவரான நிஷாத்தின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இது பற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமைச்சர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். அப்போது, வெள்ளம் சூழ்ந்துவிட்டதே என்ற கவலை தெரிவித்த மக்களிடம், எங்கெங்கோ இருந்து மக்கள் கங்கையில் புனித நீராக வருகிறார்கள். ஆனால், இங்கே கங்கையே உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறது என்று கூறினேன் என்கிறார்.

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால், நாட்டின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், து... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

டிரம்ப்பின் 50 சதவிகித வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி அமெ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு கா... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க