செய்திகள் :

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

post image

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, நேற்று (ஆக.5) மதியம் மிகப் பெரியளவில், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமானதாகவும், அவர்களது நிலைக் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவர்களது உறவினர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியின் சாலைகள் முடக்கப்பட்டதால், ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட அவர்கள் அனைவரும், பேரிடர் ஏற்பட்ட கங்கோத்ரியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாகவுள்ளதாகவும், திரும்பி வருவதற்கான பாதைகள் அனைத்தும் முடங்கியதால், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, உத்தரகண்டின் மலையாளி சமாஜம் தலைவர் திணேஷ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், சுற்றுலாக் குழுவினரின் வாகன ஓட்டுநர் அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என உறுதியளித்ததாகக் கூறியுள்ளார்.

இத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வாகனம் எங்குள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்களது உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக, உத்தரகாசியில் ஏற்பட்ட பேரிடரில் ஏராளமானோர் மாயமானதாகக் கருதப்படும் நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், தீயணைப்புப் படை, காவல் துறை உள்ளிட்ட ஏராளமான படைகள் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

28 tourists from Kerala who were missing in the disaster following the Uttarakhand cloudburst have been confirmed safe.

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க

அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னம்: கர்தவ்ய பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.நாட்டில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சகங்களுக்கான புதிய நிர்வாகக் கட்டடத்தைத் திறந்த... மேலும் பார்க்க