செய்திகள் :

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

post image

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ஆண் நண்பர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அம்மாணவி நீண்டகாலமாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

காலை 11 மணியளவில் வீட்டுக்கு வந்த அவரின் பெற்றோர், நீண்ட நேரமாக தங்களின் மகள் வெளியே வராததால், சந்தேகமடைந்து அறையின் கதவை அடித்து உடைத்து உள்நுழைந்தனர்.

இந்த நிலையில்தான், தங்களின் மகள் தீக்குளித்து கடுமையான தீக்காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிஸாவில் கடந்த ஒரு மாதத்திலேயே இது மூன்றாவது தீக்குளிப்பு சம்பவமாகும். ஜூலை 12-ல் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது துறைத் தலைவர் பாலியல் தொல்லை அளிப்பதாகக் கூறி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஜூலை 19-ல் பாலங்காவில் 15 வயது சிறுமி ஒருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Odisha college student dies by suicide by self-immolation after alleged blackmail by friend

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு கா... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க