செய்திகள் :

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

post image

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி முதல் செப்.1 ஆம் தேதி வரை ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களுடன், உச்சி மாநாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த, பிரதமர் மோடி ஜப்பானுக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையடுத்து, பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாநாடு வரும் ஆக.31 முதல் செப்.1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரதமர் மோடியின் இந்தப் பயணங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அவரது சீன பயணம் உறுதி செய்யப்பட்டால், கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா - சீனா இடையில் நடைபெற்ற எல்லைப் பிரச்னைகளுக்குப் பிறகு, 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்லும் முதல் பயணமாக இது இருக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

Reports have emerged that Prime Minister Narendra Modi will be making his first official visit to China since the border dispute in 2020.

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு கா... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க