செய்திகள் :

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

post image

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

மைசூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றை காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கு மெபெட்ரோன் (MD) என்ற போதைப் பொருள் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த போதைப் பொருள் உற்பத்தியின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் நபர், அதன் உறுப்பினர்களிடையே தொடர்பு கொள்ள சட்டைகளின் படங்களை குறியீடாகப் பயன்படுத்தியது உள்ளிட்டத் தகவல்களை மும்பை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் கும்பல், இரண்டு குழுக்களாக செயல்பட்டு வந்துள்ளது. ஒரு கும்பல், மைசூருவில் போதைப்பொருள் தயாரிப்பதை கவனிக்கும். மற்றொன்று தயாரிக்கப்பட்ட போதைப் பொருளை மும்பைக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்வதைக் கவனிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த இரு கும்பலுக்கும், ஒரு கும்பலை, மற்றொரு கும்பலுக்குத் தெரியாது. பாதுகாப்புக்காக, இவர்களே அவர்களுக்குள் அடையாளங்களை மறைத்துக்கொண்டுள்ளனர். ஒரு கும்பலைப் பிடித்தாலும் அவர்களால் மற்றொரு கும்பலைக் காட்டிக்கொடுக்க முடியாதாம். இவர்கள் ஒரு கும்பலை மற்றொரு கும்பல் அடையாளம் காண சட்டைகளின் படங்களைப் பயன்படுத்தியிருப்பதை காவல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது மைசூரு குழுவும், மும்பை குழுவும் பெங்களூருவில் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது ஒருவருக்கு மற்றொருவர் அணிந்திருக்கும் சட்டையின் புகைப்படம் அனுப்பிவைக்கப்படும். அந்த சட்டை அணிந்து வருபவரிடம் போதைப் பொருள் ஒப்படைக்கப்படும். இவர் யாரென்று அவருக்குத் தெரியாது, அவர் யாரென்று இவருக்குத் தெரியாமல், ஒரு பெரிய கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு சாலை வழியாகச் சென்று, பிறகு அது வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு, நடந்து செல்பவர்கள் மூலம் சோதனைச் சாவடிகளைக் கடந்து நகரத்துக்குள் கொண்டு செல்லப்பட்டு வந்துள்ளது.

இந்த கும்பலின் முக்கிய தலைவர் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், சகினாகா காவல்துறையினர், வசாய் என்ற இடத்தில் மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.8.04 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகாவின் மைசூருவில் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தகவலையடுத்து மைசூருவில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை சோதனை செய்து ரூ.381 கோடி மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், நான்கு பேரை கைது செய்தது.

Mumbai police, who discovered a factory manufacturing the drug methamphetamine, have discovered that they were using images of T-shirts as symbols.

இதையும் படிக்க... அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் - உச்ச நீதிமன்றம்

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க

அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் சின்னம்: கர்தவ்ய பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.நாட்டில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சகங்களுக்கான புதிய நிர்வாகக் கட்டடத்தைத் திறந்த... மேலும் பார்க்க