செய்திகள் :

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

post image

இந்தியாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்த சான்றுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்குத் திருட்டு நடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த ராகுல் காந்தி, இன்று அதனை வெளியிட்டுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:

”ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு கருத்து கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் வேறுபடுகின்றன. ஹரியாணா, மத்திய பிரதேசத்தில் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டன.

மகாராஷ்டிரத்தில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 மாதங்களில் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததும் எங்களுக்கு சந்தேகங்களை எழுப்பியது.

மக்களவையில் அமோக வெற்றி பெற்ற நாங்கள் சட்டப்பேரவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தோம். இரண்டு தேர்தலுக்கு மத்தியில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் வந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் குற்றச்சாட்டு எழுப்பினோம். வாக்காளார் பட்டியல் என்பது நாட்டின் சொத்து. ஆனால், அந்த பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது. பின்னர், சுவாரஸ்யமான ஒன்றை தேர்தல் ஆணையம் செய்தது. வாக்குச் சாவடி சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக கூறினார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவிகிதம் அதிகரித்த கேள்வி எங்கள் முன் இருந்தது. இந்த இரண்டு விஷயங்களும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதை உறுதியாக நம்ப வைத்தன.

தேர்தலில் எப்படி மோசடி நடைபெறுகிறது என்பதை ஆராய ஆய்வுக் குழு அமைத்தோம்.

மக்களவைத் தேர்தல் தரவுகளை ஆராய்ந்தோம். தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை தராததால் ஒரு மக்களவை தொகுதியில் உள்ள ஒரு சட்டப்பேரவை வாக்காளர்களை ஆராய 6 மாதங்கள் ஆகின.

கர்நாடகத்தில் ஆட்சி அமைத்த நாங்கள் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தோம். எங்களுக்கு ஏமாற்றம் அளித்த மத்திய பெங்களூர் தொகுதியை ஆராய முடிவு செய்தோம். அதில், அனைத்து சட்டப்பேரவையிலும் வெற்றி பெற்ற நாங்கள் மகாதேவபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் கடும் சரிவைக் கண்டோம்.

மத்திய பெங்களூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் 6,58,915 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 6,26,208 வாக்குகள் பெற்றனர். வெற்றி வித்தியாசம் 32,707 வாக்குகள் மட்டுமே.

மகாதேவபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2.29 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2.29 லட்சம் வாக்குகள் பாஜகவும், 1.15 லட்சம் வாக்குகள் காங்கிரஸும் பெற்றிருந்தது. வித்தியாசம் மட்டும் 1.14 லட்சம்.

இந்த தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. 5 வகையில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது.” என்றார்.

பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்க... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

25% தாங்காது! மேலும் 25 சதவிகிதமா? டிரம்ப் வரியால் அடிவாங்கும் ஆடைகள், கடல் உணவுகள்... மேலும் என்னென்ன?

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முன்வராததால், இந்தியாவுக்கு அறிவித்த வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்திய பொருள்க... மேலும் பார்க்க

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

குவஹாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையம் இந்தாண்டு நவம்பரில் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளைப் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்ல... மேலும் பார்க்க