செய்திகள் :

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

post image

புதுதில்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (டிஆர்டிஓ) சயின்டிஸ்ட் , பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் , அறிவியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 156

பணி: Scientist, Engineer (B)

காலியிடங்கள்: 152

வயது வரம்பு: 4.7.2025 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, சிஎஸ்இ, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டீரியல் சயின்ஸ் & இன்ஜினியரிங், மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்ட் இன்ஜினியரிங், சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Life Science பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உயிரி மருத்துவப் பொறியியல், தொழில்நுட்பம், உயிரி மருத்துவ மின்னணுவியல், உயிரி மருத்துவ கருவி பொறியியல், உயிரி மின்னணுவியல், மருத்துவ டிரானிக்ஸ் பொறியியல், மின்னணுவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல், உயிரி மருத்துவம் மற்றும் ரோபாட்டிக்ஸ் பொறியியல், உளவியல், பயன்பாட்டு உளவியல், மருத்துவ உளவியல், ஆலோசனை, சுகாதார உளவியல், ராணுவ உளவியல், அறிவாற்றல் உளவியல், உளவியல் (நிறுவன நடத்தை), உடலியல் உளவியல், அசாதாரண உளவியல், சமூக உளவியல், கல்வி உளவியல், தொழில்துறை உளவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், வளிமண்டல அறிவியல், கடற்படை கட்டடக்கலை அறிவியல் போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதல் வகுப்பு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் கேட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 2023, 2024, 2025 இல் நடைபெற்ற கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் டிஆர்டிஓ நடத்தும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வரவும். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.8.2025

தகுதி பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள், அதற்கு இணையான பாடப்பிரிவுகள், பாட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம், காலியிட பகிர்வு விபரம் மற்றும் எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்ட விபரம் ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறியஇங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

RAC invites online applications from graduate engineers and post graduates in Science including students who have appeared in their final semester examinations, through RAC website

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வேயில் காலியாகவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாகவுள்ள பாராமெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Staff Nurseகாலியிடங்கள்: 93சம்பளம்: மாதம் ரூ.18,000தகுதி : நர்சிங் பிரிவி... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

மைசூரில் செயல்பட்டு டிஆர்டிஓ-இன் தற்காப்பு உயிரியல் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 3,500 செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மாலுமி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்... மேலும் பார்க்க