செய்திகள் :

சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!

post image

ஒடிசாவில் கஜபதி மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக ஒருவரைக் கிராமத்தினர் அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 28ஆம் தேதி இரவு மாவட்டத்தில் உள்ள மோகனா காவல் எல்லைக்குள்பட்ட குசும்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

இறந்த கருணாகரின் உறவினர் பெண் சபிதா, மோகனா காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜூலை 28ல் இரவு 6 மணியளவில் சிலர் கருணாகரை அழைத்துச் சென்றனர். அப்போதிலிருந்து அவரை காணவில்லை. நான் விசாரித்தபோது, கிராமவாசிகள் அவரை அடித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கஜபதி எஸ்பி ஜதீந்திர குமார் பாண்டா கூறுகையில்,

முதற்கட்ட விசாரணையில், கருணாகர் கிராம மக்களுக்கு ஆயுர்வேதம் போன்ற மருந்துகளைப் பரிந்துரைத்தது கண்டறியப்பட்டது. 15, 20 நாள்களுக்கு முன்பு 12 வயது சிறுவனுக்கு நாய் கடித்த நிலையில், கருணாகர் சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். சில நாள்களுக்குப் பிறகு அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் மரணம் மற்றும் சமீபத்தில் நடந்த இதேபோன்ற சில சம்பவங்களால் இவர் சூனியம் வைப்பவர் என்று மக்கள் கருதினர். இதையடுத்து கோபமடைந்த கிராமத்தினர் 12 பேர் கொண்ட குழு கருணாகரை அடித்துக் கொன்று, அருகிலுள்ள காட்டில் அவரது உடலைப் புதைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிராம மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவர்கள் அதை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து போலீஸார் கருணாகரின் உடலை ஒரு காட்டிலிருந்து மீட்டனர். இதுதொடர்பாக எட்டு பேர் இதுவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

கடந்த சில நாள்களில் மோஹனா காவல் எல்லையில் பதிவான இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மலசபதர் கிராமத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் 35 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டார். கிராமவாசிகள் அந்த நபரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது அந்தரங்க உறுப்புகளை வெட்டி, அருகிலுள்ள ஹரபாங்கி அணையில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நீர்த்தேக்கத்தில் இருந்து சடலத்தை போலீஸார் மீட்டு, குற்றம் தொடர்பாக சில கிராம மக்களைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A man was allegedly killed by a group of villagers and buried in a forest on suspicion of practising witchcraft in Odisha's Gajapati district, police said on Thursday.

உத்தரகாசி பேரிடர்: 50 பேர் மாயம்! மீட்புப் பணியில் விமானப் படை!

உத்தரகண்ட் மாநிலத்தில், மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. உத்தரகாசி மாவட்டத்தில், கடந்த ஆக.5 ஆம் தேத... மேலும் பார்க்க

ராகுலின் மூளைதான் திருடுபோய்விட்டது..! மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் கடும் தாக்கு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் மூளை திருடுபோய்விட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேட... மேலும் பார்க்க

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர... மேலும் பார்க்க

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மத்திய அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடு... மேலும் பார்க்க

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

புது தில்லி: அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுவதாக உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறையால் நடத்தப்பட... மேலும் பார்க்க

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில், பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீ... மேலும் பார்க்க