செய்திகள் :

ராகுலின் மூளைதான் திருடுபோய்விட்டது..! மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் கடும் தாக்கு!

post image

வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் மூளை திருடுபோய்விட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த ராகுல் காந்தி இன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் முறைகேடு நடந்ததற்கான ஆதராங்களையும் வெளியிட்டார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்குத் திருட்டு நடத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ராகுலின் இந்தக் கருத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருவரும் கடுமையாக நிராகரித்துள்ளனர்.

கோவாவின் பானாஜியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், “ராகுலின் கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றவை. இது அவரின் தனிப்பட்ட தாக்குதல்கள். அவர் அவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

‘His brain has been stolen’: Maharashtra CM Fadnavis hits out at Rahul Gandhi over voter fraud claims

இதையும் படிக்க : வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “ஆசாதி” உள்பட 25 புத்தகங்களுக்கு, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அருந்ததி ராய், ஏஜி நூர... மேலும் பார்க்க

பாஜகவின் பிரதிநிதியாக தேர்தல் ஆணையம்! - கார்கே விமர்சனம்

ஆளும் பாஜக அரசின் பிரதிநிதியாக இந்தியத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆத... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்: 50 பேர் மாயம்! மீட்புப் பணியில் விமானப் படை!

உத்தரகண்ட் மாநிலத்தில், மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. உத்தரகாசி மாவட்டத்தில், கடந்த ஆக.5 ஆம் தேத... மேலும் பார்க்க

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர... மேலும் பார்க்க

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மத்திய அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடு... மேலும் பார்க்க

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

புது தில்லி: அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுவதாக உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறையால் நடத்தப்பட... மேலும் பார்க்க