செய்திகள் :

வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் வேண்டும்! திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்!

post image

பொருளாதார வளர்ச்சியை வைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வரின் கூற்றுகளை விளம்பரங்கள் என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,

“விளம்பர ஆட்சியில் ஒரு டிரில்லியன் பொய்கள்”

பொருளாதாரப் புள்ளி விபரங்கள் எல்லாம் ஒரு குறியீடு மட்டும்தான். பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமோ ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது.

எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

● நீர் ஆதாரங்கள் பராமரிக்கப்படாதால், உண்மையில், விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

●விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை.

●கிராமந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர்.

●நெசவாளர், மீனவர் என்று யாருமே நிம்மதியாக இல்லை.

●எல்லா இடங்களிலும் லஞ்ச, லாவண்யம் புரையோடி இருக்கிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.

●சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் வெறுப்பின் விளிம்பில் உள்ளனர்.

●தமிழகம் முழுக்க இந்த அரசுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசுவதை, என் பயணத்தில் கண் எதிரே காண முடிகிறது.

●சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும், திமுகவின் ரௌடிப் பட்டாளத்தின் அட்டூழியத்தைக் கண்டும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொய் சொல்லி விளம்பர சூட்டிங் நடத்தும் திமுக ஆட்சிக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர நாள் விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சுதந்திர நாள் விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு செல்ல 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06089) ஆக. 14 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை, மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று(ஆக. 6) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கமல்ஹாசன் தன்னுடை... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை: முதல்வர் நாளை வெளியீடு!

தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக. 8) வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திமுக அரசு பதவியேற்ற பின்னர், 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கெனமாநிலக் கல்விக... மேலும் பார்க்க

கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இருவரது சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் ஐடி... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகின்றது.முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப... மேலும் பார்க்க

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

கலைஞரின் ஒளியில் ’எல்லார்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுகவின் முன்னாள் தலைவரும் தம... மேலும் பார்க்க