செய்திகள் :

கேரள அரசுடன் இணைந்து பணியாற்ற Vloggers, Youtubers, Instagram இன்ஃப்ளூயன்சர்களுக்கு அழைப்பு

post image

கேரளாவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் கேரளாவின் வளர்ச்சியைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 'Vloggers, Youtubers, Instagram, Facebook' உள்ளிட்ட சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது கேரள அரசு.

இதில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3,00,000 ஃப்லோவர்ஸ், ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த சேனல்கள், எந்தவொரு காவல்துறை புகார்களும், சர்சைகளும் இல்லாத நபராக இருக்க வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை.

Vloggers

கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாடுகளின்படி தகுதி வாய்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் இதற்கு விண்ணபிக்கலாம். இந்த விண்ணப்பத்திலேயே உங்களின் தரமான வீடியோக்கள், சமூக வலைதள பக்கங்களின் லிங்கையும் விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டியிருக்கும்.

தரமான ஐடியாக்கள், கைதேர்ந்து சிறப்பாக வீடியோ எடுப்பவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வீடியோக்கள் எடுக்கலாம். கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இணையதளம் மூலம் இந்த மாதம் ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் இந்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நல்ல வீடியோக்களுக்குப் பரிசும், அரசுடன் இணைந்து பணியாற்றவும் வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"Legal Opinion கேட்டிருக்கிறோம்; பார்ப்போம்!" - கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் சொன்னதென்ன?

ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியலில் தொடர்ந்து வலுத்துவரும் சூழலில், தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார்கள் தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள். இந்த திடீர் சந்தி... மேலும் பார்க்க

"இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு தமிழ்நாடு" - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசுதான் என பெருமிதத்துடன் கூறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதி... மேலும் பார்க்க

Bihar: "என் அப்பாதான் ஆணவப்படுகொலை செய்தார்; என் மடியிலேயே உயிரைவிட்டான் என் காதலன்"-கதறி அழும் பெண்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் தினமும் சாதிய ஆணவப்படுகொலைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நெல்லையில் கவின் ஆணவப்படுகொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) அதே நெல... மேலும் பார்க்க

NTK: `பனை, மாடு மேய்ச்சல், மரம், தண்ணீர், மலை மாநாடுகள்.!' - கைகொடுக்கிறதா சீமானின் புது ரூட்?

‘ஒரணியில் தமிழ்நாடு’, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் சூழலில், மாடு மாநாடு, தண்ணீர் மாநாடு என புது வழி எடுக்கிறது நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை நிறுத்தம்; தபால் பெட்டிகளுக்கு விடைகொடுப்போம்!

டிஜிட்டல் யுகம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் எல்லாமே வேகம் அதிவேகம்தான். காத்திருப்பு என்ற வார்த்தைக்கூட பயன்பாட்டில்லை, கால வேகத்தில் காலாவதியாகிவிட்டது. இங்கிலாந்தில், லோங... மேலும் பார்க்க

``ரூ.22 கோடியில் கௌசிகா நதி புனரமைப்பு; 3000 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்'' - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் கெளசிகா நதியை புனரமைக்கும் நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரும் பணியை மாவட்ட ... மேலும் பார்க்க