செய்திகள் :

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

post image

அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது கொடூர இனவெறித் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த தம்பதியின் 6 வயது மகள் மீது அயர்லாந்து சிறுவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டு என்ற இடத்தில் வசித்து வந்த அனுபா அச்சுதனின் மகளான நியா (6), தங்கள் வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் சிலர் சேர்ந்து நியாவை தாக்கியுள்ளனர்.

மேலும், நியாவை இந்தியாவுக்கே சென்று விடு என்றும் மிரட்டியதுடன், சிறுமியின் அந்தரங்க உறுப்பிலும் தாக்கியுள்ளனர்.

சிறுமி மீதான இந்தக் கொடூர இனவெறித் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயர்லாந்தில் கடந்த இரு வாரங்களில் மட்டும் இந்தியர்கள் மீது 3 இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Racist Attack On Indian-Origin Girl In Ireland

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

மாஸ்கோ சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷிய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்... மேலும் பார்க்க

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

சத்தீஸ்கரில் நீண்ட நேர துப்பாக்கிச் சூடு தாக்குதல்களுக்கு பின், ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு நக்சல் தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரில் புதியதாக உருவாக்கப்பட்ட மொஹ்லா - மன்... மேலும் பார்க்க

புல்டோசர் நடவடிக்கை: 2 மாதங்களில் இடிக்கப்பட்ட 130-ல் பெரும்பாலும் இஸ்லாமியர் கட்டடங்களே!

பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கட்டடங்களை புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கப்படுவது, தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இருப... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “ஆசாதி” உள்பட 25 புத்தகங்களுக்கு, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அருந்ததி ராய், ஏஜி நூர... மேலும் பார்க்க

பாஜகவின் பிரதிநிதியாக தேர்தல் ஆணையம்! - கார்கே விமர்சனம்

ஆளும் பாஜக அரசின் பிரதிநிதியாக இந்தியத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆத... மேலும் பார்க்க