செய்திகள் :

50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை நிறுத்தம்; தபால் பெட்டிகளுக்கு விடைகொடுப்போம்!

post image

டிஜிட்டல் யுகம் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில் எல்லாமே வேகம் அதிவேகம்தான். காத்திருப்பு என்ற வார்த்தைக்கூட பயன்பாட்டில்லை, கால வேகத்தில் காலாவதியாகிவிட்டது.

இங்கிலாந்தில், லோங்வில்லி மாகாண போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மினிஸ்டர் ஃபாகத் என்பவரது மனைவியின் யோசனையில், முதல் தபால் பெட்டி 1653-ம் ஆண்டு அறிமுகமானது. தபால் பெட்டிக்கு மாதிரி வடிவத்தை கொடுத்தவர் சார்லஸ் ரீவ்ஸ்.

அதன்பிறகு 1852 வடமேற்கு ஐரோப்பா ஜெர்சி (Jersey) தீவில் பணியாற்றிய ஆந்தனி ட்ரோலோப் (Anthony Trollope) என்ற தபால் துறை அதிகாரி, மக்களுக்கு கடிதம் போட வசதியாக சாலைகளில் இரும்பு பெட்டிகள் அமைக்கும் யோசனையை செயல்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

1856 – பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் தெரு தபால் பெட்டிகள் நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் மரப்பெட்டிகள் இருந்தாலும், பிறகு இரும்பு மற்றும் எஃகு பெட்டிகள் வந்தன.

தபால் நிலையம்

'சார் தபால் வந்திருக்கு!' எனக் குரல் கேட்டதும், தபால் வருமென காத்திருந்து வாங்கிப் பெற்ற காலம் எல்லாம் மாறிவிட்டது. அரசின் கடிதங்கள், ஆணைகள், நீதிமன்ற ஆணைகள், வங்கி கடிதங்கள் மட்டுமே தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. நவீன கால மாற்றத்திற்கு நாமும் மாறவேண்டும் என பெரிதாகப் பயன்பாட்டில் இல்லாத பதிவு தபால் சேவையை நிறுத்துப்படப்போகிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் பதிவு தபால் சேவையை (Registered Post Service) வரும் செப்டம்பர் 1-ம் தேதியில் ஸ்பீட் போஸ்ட் உடன் ஒருங்கிணைக்கப் போவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.

பதிவு தபால்களின் மீதானஆர்வம் மக்களிடையே குறைந்த நிலையில் தபால் சேவைகளை நெறிப்படுத்துதல், கண்காணிப்பை மேம்படுத்துதல், சேவைகளை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

NTK: `பனை, மாடு மேய்ச்சல், மரம், தண்ணீர், மலை மாநாடுகள்.!' - கைகொடுக்கிறதா சீமானின் புது ரூட்?

‘ஒரணியில் தமிழ்நாடு’, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் சூழலில், மாடு மாநாடு, தண்ணீர் மாநாடு என புது வழி எடுக்கிறது நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

``ரூ.22 கோடியில் கௌசிகா நதி புனரமைப்பு; 3000 ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்'' - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் கெளசிகா நதியை புனரமைக்கும் நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரும் பணியை மாவட்ட ... மேலும் பார்க்க

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்து 50 ஆண்டுகளாக கிடைக்காத இழப்பீடு - போராட்டம் தீவிரம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக 1981-ம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதற்கு எதிராக ந... மேலும் பார்க்க

`புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்-நடிகைகள்' - கொதிப்பில் எழுத்தாளர்கள்; அரசு தரப்பு விளக்கம் என்ன?

நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் நான்காவது புத்தக கண்காட்சி நட... மேலும் பார்க்க

அசத்திய கோவை தன்னார்வலர்கள்; ஏழை மக்களுக்கு சென்ற 2 டன் உணவு

கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் ஆடி 18 தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் பக்தர்கள் முன்னோர் மற்றும் மறைந்த உறவினர்களுக்கு உணவு, பழங்கள் படையலிட்டு வழி... மேலும் பார்க்க

தவெக மதுரை மாநாடு தேதி மாற்றம்; "காவல்துறை சொன்ன காரணம் இதுதான்" - என். ஆனந்த் விளக்கம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிர... மேலும் பார்க்க