செய்திகள் :

Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! என்ன வீடியோ அது?

post image

நடிகை தீபிகா படுகோனின் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு விளம்பர வீடியோ, 1.9 பில்லியன் பார்வைகளைப் பெற்று இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக புதிய சாதனை படைத்துள்ளது.

ஹில்டன் ஹோட்டல் நிறுவனத்துடனான கோலப் விளம்பரத்தில் தோன்றிய தீபிகா படுகோன் ரீல், இன்ஸ்டாகிராமில் முந்தைய அனைத்து பார்வை சாதனைகளையும் முறியடித்துள்ளது.

ஜூன் 9 ஆம் தேதி வெளியான இந்த ரீல், ஹர்திக் பாண்ட்யா மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற முன்னணி பிரபலங்களின் வீடியோக்களின் பார்வைகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இதற்கு முன், பாண்ட்யாவின் BGMI வீடியோ 1.6 பில்லியன் பார்வைகளையும், ஒரு ஸ்மார்ட்போன் விளம்பர வீடியோ 1.4 பில்லியன் பார்வைகளையும் பெற்றிருந்தன. இதனை தீபிகா படுகோன் ரீல் அதிக பார்வைகளைப் பெற்று முறியடித்துள்ளது.

தீபிகா கடைசியாக “சிங்கம் அகெய்ன்” திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்து அட்லி இயக்கத்தில் உருவாகும் “AA22xA6” என்ற பான்-இந்திய படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வியட்நாமில் `ஆப்பிள் மேக்புக்' : மிச்ச பணத்தில் 11 நாட்கள் டூர்; பலே பிளான் போட்ட இந்தியர் - எப்படி?

ஒரு இந்தியர், தனது சாமர்த்தியமான யோசனை மூலம் `ஆப்பிள் மேக்புக்'கை வியட்நாமில் குறைந்த விலையில் வாங்கி, அங்கே பதினொரு நாட்கள் விடுமுறையை அனுபவித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்தியாவில் ஆப்பிள... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றம்: `கட்சி செய்தித்தொடர்பாளர் நீதிபதியாக நியமனமா?' - பாஜக சொல்வதென்ன?

மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக்குழு 3 நீதிபதிகளை நியமித்து பரிந்துரை செய்துள்ளது. அஜித் காதேதன்கர், அராதி சாதே, சுஷில் கோடேஷ்வர் ஆகியோர் பெயர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சுப்ரீ... மேலும் பார்க்க

தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?

பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ... மேலும் பார்க்க

இறந்த அம்மாவின் வங்கி கணக்குக்கு திடீரென கிரெடிட்டான பல கோடி ரூபாய் - அதிர்ச்சியில் உறைந்த மகன்

உத்திர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞரான தீபக் என்பவர் பயன்படுத்தும் வங்கி கணக்கில் திடீரென 37 இலக்கங்களில் (10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) ஒரு பெரிய தொகை வந்ததைக்... மேலும் பார்க்க

Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ஆகஸ்ட் 4 ரவுண்ட்அப்

* தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் ரூ. 32,554 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானத... மேலும் பார்க்க

ஏர் இந்திய விமானத்தில் கரப்பான் பூச்சித்தொல்லை; விமானத்தை நிறுத்தி மருந்தடித்த ஊழியர்கள்!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு இன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம் இந்தியாவை நெருங்கியபோது விமானத்தில் கரப்பான் பூச்சி ஆங்காங்கே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.இரண்ட... மேலும் பார்க்க