செய்திகள் :

தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?

post image

பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.

குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ’வெர்டிஸ் சுதந்திர குடியரசு’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். இந்த நாட்டிற்கு சொந்தக் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலிய வம்சாவளியைக் கொண்ட ஜாக்சன், 2019 மே 30 அன்று வெர்டிஸை அதிகாரப்பூர்வமாக சுதந்திர குடியரசாக அறிவித்தார்.

இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷிய மற்றும் செர்பியா ஆகிய மொழிகள் உள்ளன. யூரோ நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. குரோஷியாவின் ஒசிஜெக் நகரிலிருந்து படகு மூலம் மட்டுமே வெர்டிஸை அடைய முடியும்.

நாடு உருவாக்கும் போது பலவிதமான சவால்கள் இருந்துள்ளன. 2023 அக்டோபர் மாதத்தில் , குரோஷிய காவல்துறை ஜாக்சனையும் சில குடியேறியவர்களையும் கைது செய்து, அவர்களை நாடு கடத்தியது.

குரோஷியாவிற்குள் நுழைய அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. “எங்களை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறி மட்டுமே இப்படி நடவடிக்கை எடுத்தார்கள்” என கூறியிருக்கிறார் ஜாக்சன். தற்போது நாடு கடத்தப்பட்ட நிலையில், வெர்டிஸை தொலைவிலிருந்து நிர்வகித்து வருகிறார். குரோஷியாவுடன் அமைதியான உறவைப் பேண விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

வெர்டிஸ் குடிமகனாக யார் ஆகலாம்?

வெர்டிஸ் ஆரம்பத்தில் நான்கு பேருடன் தொடங்கியது, தற்போது 400 குடிமக்களைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் குடியுரிமைக்கு ஆர்வம் காட்டியுள்ளனர். வெர்டிஸ் சொந்த கடவுச்சீட்டுகளை வழங்கினாலும், அவை சர்வதேச பயணத்திற்கு பயன்படுத்தப்படக் கூடாது என்று ஜாக்சன் எச்சரித்துள்ளார்.

வெர்டிஸ் நாடு மருத்துவம், காவல்துறை போன்ற திறன்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த அம்மாவின் வங்கி கணக்குக்கு திடீரென கிரெடிட்டான பல கோடி ரூபாய் - அதிர்ச்சியில் உறைந்த மகன்

உத்திர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த 20 வயது இளைஞரான தீபக் என்பவர் பயன்படுத்தும் வங்கி கணக்கில் திடீரென 37 இலக்கங்களில் (10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) ஒரு பெரிய தொகை வந்ததைக்... மேலும் பார்க்க

Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ஆகஸ்ட் 4 ரவுண்ட்அப்

* தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் ரூ. 32,554 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானத... மேலும் பார்க்க

ஏர் இந்திய விமானத்தில் கரப்பான் பூச்சித்தொல்லை; விமானத்தை நிறுத்தி மருந்தடித்த ஊழியர்கள்!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு இன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம் இந்தியாவை நெருங்கியபோது விமானத்தில் கரப்பான் பூச்சி ஆங்காங்கே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.இரண்ட... மேலும் பார்க்க

Eng v Ind : `டெஸ்ட் போட்டினா இதுதான்.!’ - இந்தியாவின் த்ரில் வெற்றியின் திக் திக் மொமென்ட்ஸ் | Album

Eng v Ind | இந்தியாEng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind Eng v Ind E... மேலும் பார்க்க

Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழும் தம்பதி - எப்படி?

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளுக்கான செலவுகள் அதிகப்படியாக உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி எல்லா பொருள்களின் விலைகளும் அதிகமாகி வருகிறது. ஒரு குடும்பத்தை நடத்துவது என்றாலே அதற்கான செலவுகள் ... மேலும் பார்க்க

Trending: உலகின் வயதான குழந்தை - எப்படி நிகழ்ந்தது இந்த அறிவியல் அதிசயம்? | விரிவான தகவல்கள்

அமெரிக்க தம்பதியான லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸுக்கு, சில தினங்களுக்கு முன்னால் உலகின் வயதான குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையில் என்ன வயதான குழந்தை; எப்படி என ஆச்சரியமாக இருக்கிறதா..? லிண்ட்சே , டிம... மேலும் பார்க்க