செய்திகள் :

Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழும் தம்பதி - எப்படி?

post image

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளுக்கான செலவுகள் அதிகப்படியாக உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி எல்லா பொருள்களின் விலைகளும் அதிகமாகி வருகிறது. ஒரு குடும்பத்தை நடத்துவது என்றாலே அதற்கான செலவுகள் சொல்லவே வேண்டாம், அந்த அளவுக்கு அதிகமாக உள்ளது.

இப்படி இருக்கும் சூழலில் ஒரு தம்பதி தனித்துவமான வாழ்க்கை முறையை தொடங்கி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. ”செலவில்லா வாழ்க்கை” என்று விவரிக்கப்படும் அவர்களின் வாழ்க்கை முறை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

காவ்யா மற்றும் சங்கீத் என்ற அந்த தம்பதியினர் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தங்களது செலவில்லா வாழ்க்கை முறை குறித்த விவரித்துள்ளனர். இந்த வாழ்க்கை முறை பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

அவர்கள் வீட்டிலேயே தங்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் அவர்களின் சேமிப்பு பணத்தை முதலில் முதலீடு செய்துள்ளனர். அதற்கு பின்னர் தற்போது அவர்கள் அந்த வீட்டில் செலவில்லா வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

அதாவது தங்களுக்கான காய்கறிகளை வளர்ப்பது, குளத்தில் மீன்கள் வளர்ப்பது, அரிசி உற்பத்தி செய்வது, தினசரி தேவையான புரதத்தை அவர்களின் கோழிகள் மற்றும் பசுக்களிடம் இருந்து பெறுவது என ஆரம்பத்தில் முதலீடு செய்து தற்போது செலவில்லாத ஒரு வாழ்க்கை முறையை இந்த தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர் என்கிறார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் ”நாங்கள் ஆரம்பத்தில் எங்களது சேமிப்பின் 60% பணத்தை இந்த கனவு வீடு கட்டுவதற்காக முதலீடு செய்தோம். அப்போது எங்களை பலரும் முட்டாளாக நினைத்தனர். தற்போது எங்களது கனவை இல்லத்தில் ஒரு செலவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம்.

இது 100% நிலையானது என்று சொல்ல முடியாது!

எங்களது வீடு ஒரு வாழ்விடம் மட்டுமல்லாமல் ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பாக உள்ளது. காய்கறி தொடங்கி மீன்கள் அரிசி, பால், முட்டை அனைத்தும் நாங்கள் இலவசமாகவே பெறுகின்றோம். சூரிய ஒளி மின்சார பேனல்கள் மூலம் வீடு மற்றும் நீர் பாசனத்துக்கு தேவையான மின்சாரத்தை பெறுகிறோம். இது தவிர ஒரு அறை முழுவதும் காளான் வளர்ப்புக்காக ஒதுக்கி உள்ளோம். தேனீகள் வளர்ப்பு மூலம் தேன் பெறுகிறோ.

இப்படி உற்பத்தி செய்யப்படும் மீத பொருட்களை விற்று எங்களது கனவு இல்லத்திற்கு மேலும் சேகரித்து வருகிறோம்.” என்று தங்களது வாழ்க்கை முறை குறித்து வீடியோவாக பகிர்ந்து இருக்கின்றன.

இந்த வீடியோவின் கேப்ஷனில் பணத்தை விட மன அழுத்தமும் எரிச்சல் இல்லாத ஒரு வீட்டில் தினமும் எழுந்திருப்பது முக்கியம். உங்கள் அன்புக்குரியவர்களிடம் சிறிய கனவுகளை பற்றி பேசி மகிழும் தருணங்கள் உங்களுக்கு இருக்கும். எங்கள் உணவை நாங்களே வளர்த்து இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வருகிறோம். இது 100% நிலையானது என்று சொல்ல முடியாது. ஆனால் இவ்வாறு முயற்சி செய்வதே எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இணைவாசிகளிடம் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது

Trending: உலகின் வயதான குழந்தை - எப்படி நிகழ்ந்தது இந்த அறிவியல் அதிசயம்? | விரிவான தகவல்கள்

அமெரிக்க தம்பதியான லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸுக்கு, சில தினங்களுக்கு முன்னால் உலகின் வயதான குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையில் என்ன வயதான குழந்தை; எப்படி என ஆச்சரியமாக இருக்கிறதா..? லிண்ட்சே , டிம... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்! | Photo Album

ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள்ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்... மேலும் பார்க்க

Agaram: "படிச்சா போதும்னு அண்ணன் சொல்லுவாரு; அண்ணி..." - அகரம் மேடையில் கார்த்தி கலகல

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப... மேலும் பார்க்க

Agaram: "95,000 அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கு; ஆனா 1,800 குழந்தைகளைத்தான்..." - அகரம் மேடையில் கார்த்தி

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப... மேலும் பார்க்க

திருநெல்வேலி: `விக்ரம் சாராபாய் டு கலாம்' - 101 இந்திய விஞ்ஞானிளை 8 மாதங்களில் வரைந்த பள்ளி மாணவன்!

திருநெல்வேலி, தியாகராஜ நகரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் ஏ.சி. ஹரி கிருஷ்ணா.சிறுவயதிலிருந்தே கலைமீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக சிவராம் கலைக்கூடத்தில் கலை பயின்று வருகிறார்.... மேலும் பார்க்க

Agaram: "அன்று 160 பேரை படிக்க வைக்க பட்ஜெட் இல்ல; இன்று..." - 15 வருட பயணம் பற்றி நெகிழும் சூர்யா

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப... மேலும் பார்க்க