செய்திகள் :

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

post image

நாதஸ்வரம் தொடரில் கின்னஸ் சாதனை படைத்த காட்சியில் (எபிஸோட்) முழுக்க முழுக்க இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியா தெரிவித்துள்ளார்.

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற 22 நிமிடக் காட்சியும் எந்தவித காட்சி இணைப்புகளும் (ரீ டேக்) இல்லாமல், ஒரே காட்சியில் எடுக்கப்பட்டதாகவும், அதில் நடித்தது மறக்க முடியாத தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் 2010 முதல் 2015 வரை நாதஸ்வரம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரை எம்டன் மகன் இயக்குநர் திருமுருகன் இயக்கியிருந்தார். இத்தொடர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பானதோடு மட்டுமின்றி இடையிடையே பல்வேறு சாதனை முயற்சிகளையும் செய்துள்ளது.

நாதஸ்வரம் தொடரிலிருந்து..

பொதுவாகவே ஒரு தொடருக்கு ஒரு முகப்பு பாடல் மட்டுமே இருக்கும். ஆனால், நாதஸ்வரம் தொடரில் சூழலுக்கு ஏற்ப புதுப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும். சின்ன திரையில் முதல்முறையாக நாதஸ்வரம் தொடரில் மட்டுமே இடையிடையே பாடல்கள் ஒளிபரப்பானது. சஞ்சீவ் ரத்தன் இதற்கு இசையமைத்திருந்தார். (தற்போது, சினிமா பாடல்கள் மட்டுமே தொடர்களின் இடையே ஒளிபரப்பப்படுகின்றன)

இதேபோன்று பின்னணி இசையே இல்லாமல் 22 நிமிட எபிஸோட், வசனங்களே இல்லாமல் ஒரு எபிஸோட் என பல்வேறு சாதனைகளை நாதஸ்வரம் செய்துள்ளது. இந்த வரிசையில், ஒரே காட்சியில் அதுவும் நேரலையில் ஒரு எபிஸோட் ஒளிபரப்பப்பட்டு, அது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த எபிஸோட்

அக்காட்சி குறித்து பேசியுள்ள நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, ''நாதஸ்வரம் தொடரில் வேறு எந்தத் தொடரிலும் இல்லாத வகையில் நேரலைக் காட்சி இடம் பெற்றது. மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருக்க நடிகர்கள் அனைவரும் மேடையில் நடிப்பதைப்போன்று நடிக்க வேண்டும்.

கேமரா, பின்னணி இசை, என பல்வேறு துறையினரும் நேரலையில் பணியாற்றினோம். அது ஒரு மறக்க முடியாத தருணம். எந்தத் துறையைச் சேர்ந்தவர் தவறிழைத்தாலும் மொத்தக் காட்சியும் வீண்; மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது மனதில் இருக்க வேண்டும்.

கின்னஸ் சாதனை படைத்த எபிஸோட்

இதற்காக வெறும் 3 நாள்கள் மட்டுமே பயிற்சி செய்தோம். ஏனெனில், ஆயிரமாவது எபிஸோட் லைவ் செல்ல வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.

அதிருஷ்டவசமாக ஆயிரமாவது நாளில் கதைப்படி என்னுடைய காட்சிகள் இடம்பெற்றன. 22 நிமிடங்களும் நேரலையாக நடித்திருந்தோம். வெறும் நடிப்பு மட்டுமின்றி, விரும்பத்தகாத ஆனால் கடத்தப்படுதல், தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தல் எனப் பல்வேறு உணர்வுகள் அதில் வெளிப்படும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

லண்டனில் இருந்து கின்னஸ் சாதனை நடுவர்கள் வந்திருந்தனர். 22 நிமிடக் காட்சிகளை அவர்கள் நேரலையில் கண்டனர். தற்போது கின்னஸ் சாதனையில் அது இடம்பெற்றுள்ளது. நாதஸ்வரம் பெருமை மிகுந்த தொடராக என்றுமே நிலைத்திருக்கும்'' எனப் பேசினார்.

ஸ்ருதி சண்முகப் பிரியாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு, அந்தக் காட்சிகளை நேரலையில் கண்ட அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க |மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

Actress Shruti Shanmugab Priya is happy that the entire episode of the Guinness World Record-breaking scene in the serial Nathaswaram was featured.

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியின் மூலமாக பாடலை நிறைவு செய்ததாக இசையமைப்பாளர் அனிருத் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகியுள... மேலும் பார்க்க

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

கோபி சுதாகரின் சோசியல் பரிதாபங்கள் விடியோவுக்கு ரசிகர்கள், இயக்குநர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை கோபி - சுதாகர் என்ற யூடியூபர்கள் நடத்தி வருகிறார்கள். 6... மேலும் பார்க்க

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஹான் பாண்டா நடித்த சய்யாரா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியை அடைந்துள்ளது. நடிகை அனன்யா பாண்டேவின் சகோதரான அஹான் பாண்டே சய்யாரா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ... மேலும் பார்க்க

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்! தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

புணேவைச் சேர்ந்த உள்ளூர் ஹிந்துத்துவ அமைப்பினர், சத்ரபதி சிவாஜி குறித்து வெளியாகவிருக்கும் புதிய திரைப்படத்தை தடை செய்யக்கோரி திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இயக்குநர் ராஜ் மோரேவின... மேலும் பார்க்க

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சின்ன திரை தொடரில் மகனாக நடித்த நடிகரை, தாய் பாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் திருமணம் செய்துள்ளார். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், இவர்கள் இருவரும் இணைந்து வெற்றிகரமாக குடும்பத்தை நடத்தி வருகின... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

பாக்கியலட்சுமி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடைசி வாரத்தில், அதன் டிஆர்பி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சின்ன திரை தொடர்களுக்கு ஒவ்வொரு வாரமும் டிஆர்பி புள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க