செய்திகள் :

Sivakarthikeyan: "இந்திய மக்கள் தொகைக்கு நான் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்!" - எஸ்.கே கலகல!

post image

சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி ரிலீஸாகிறது.

இதனைத் தாண்டி, தற்போது 'பராசக்தி' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

இந்த ஆண்டின் நாஸ்காம் கூட்டத்தில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பங்கேற்றிருந்தார்.

Parasakthi
Parasakthi

அதன் முழுக் காணொளி தற்போது யூட்யூபில் வந்திருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் சினிமா, குடும்பம் என இரண்டையும் சமாளிப்பது தொடர்பாகவும், தன்னுடைய குழந்தைகள் பற்றியும் பகிர்ந்திருக்கிறார் எஸ்.கே.

சிவகார்த்திகேயன் பேசும்போது, "எனக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் எப்போதும் அவர்களுடன் விளையாடுவேன்.

என் மனைவிதான் குழந்தைகளை முழுமையாகக் கவனித்துக் கொள்வார். அவருக்குதான் உண்மையான வலி தெரியும். நான் ஒரு கண்டிப்பான தந்தையும் கிடையாது.

இன்று இந்த நிகழ்வுக்கு என் மகளையும் அழைத்து வந்திருக்கிறேன். இங்கு நிறையப் பெண்கள் இருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து இன்ஸ்பயராகத் தான் என் மகளை இன்று இங்கு அழைத்து வந்திருக்கிறேன்.

என் முதல் மகனுக்கு நான்கு வயதாகிறது. இரண்டாவது மகனுக்கு ஒரு வயதாகிறது. (சிரித்துக்கொண்டே) இந்திய மக்கள் தொகைக்கு நான் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்.

படப்பிடிப்புத் தளங்களில் பயங்கரமான அழுத்தம் ஏற்பட்டு, வீட்டை அடையும்போது என்னுடைய குழந்தைகள்தான் என் அழுத்தத்தைக் குறைத்து மகிழ்விப்பார்கள்.

நான் இப்போது என் மகள் ஆராதனாவுடன் நண்பனாக இருக்கிறேன். சினிமா துறையைப் பொறுத்தவரை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வேலை இருக்கும்.

திடீரென, ஒரு மாதத்திற்கு உங்களுக்கு விடுப்பு கிடைக்கும். இப்போது குடும்பத்திற்காக என் நேரத்தைச் செலவழிக்கிறேன்.

ஆனால், நான் தொலைக்காட்சியில் இருந்தபோது எனக்கு அது கடினமாகவே இருந்தது. என் குழந்தைகளிடமிருந்து கிடைக்கும் அன்பு மிக உண்மையானது. எனக்கும் அந்த உண்மையான அன்புதான் தேவை," எனப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`நமக்கே சில படங்கள் ஓடாதென தெரியும்போது, அதை செய்தால் தவறாகிடும்..!' - அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் 'கூலி' படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகி... மேலும் பார்க்க

Anirudh: " பாடலுக்காக சாட் ஜி.பி.டி-யின் உதவியை நாடினேன்!" - அனிருத் ஓப்பன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் 'கூலி' படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகி... மேலும் பார்க்க

Coolie: `கூலி டைம் டிராவல் படமா?’ - லோகேஷ் கனகராஜ் கொடுத்த சப்ரைஸ் பதில் என்ன?

'கூலி' படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் ப்ரோமோஷன் பணிகளிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். பேட்டிகள், இசை வெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு என லோகேஷ... மேலும் பார்க்க

Ajith: `கரியர் மட்டும் இல்லாம பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கீங்க'- அஜித் குறித்து நெகிழும் ஷாலினி

அஜித் திரைத்துறையில் 33 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அவரின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அஜித் தன் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். இது குறித்து சில தினங்க... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "என்னோட இந்தப் படத்தை பார்ட் 2 எடுக்கலாம்; ஆனால்" - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என இரண்டு படங்களின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்நிலையில் 'Nasscom' என்ற சேனலுக்கு நேர்காணல் கொடுத்திருக... மேலும் பார்க்க

அகரம் அறக்கட்டளை: "இந்த முயற்சியில் உங்களுக்குச் சேவையாற்றத் தயார்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் 20வது ஆண்டுவிழாவில் மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று (ஆகஸ்ட் 3) கலந்துகொண்டார்.அந்த நிகழ்வையும் சூர்யாவை வாழ்த்தும் வகையில், "நாம் இருவரும் நே... மேலும் பார்க்க