செய்திகள் :

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

post image

புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.98,820 ஆக உள்ளதாக அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்தது. அதே வேளையில் 99.9 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் அதன் முந்தைய சந்தை முடிவில் ரூ.98,020 ஆக இருந்தது.

தலைநகரில் 99.5 சதவிகித தூய்மை கொண்ட தங்கம் இன்று 10 கிராமுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.98,500 ஆக உள்ளது. அதுவே நேற்று 10 கிராமுக்கு ரூ.97,800 ஆக முடிவடைந்தது.

பாதுகாப்பான புகலிடத்திற்கான தேவை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் அதன் வட்டி விகிதக் குறைப்பு சுழற்சியை மீண்டும் தொடங்கும் என்ற ஒருமித்த கருத்தால் தங்கத்தின் விலை இன்று உயர்ந்தது.

பெடரல் ரிசர்வ் அதிகாரியான டோவிஷ் கருத்துக்கள், கடந்த வாரம் ஏமாற்றமளிக்கும் வேலைவாய்ப்பு சந்தை உள்ளிட்டவை, செப்டம்பரில் நடைபெறவிருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கியி கூட்டத்தில் வட்டி விகிதக் குறைப்புகளைப் குறித்த வர்த்தகர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

இது குறித்த சரஃபா சங்கம் தெரிவித்ததாவது:

இன்று வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,12,000 ஆகவும், அதன் முந்தைய சந்தை அமர்வில் கிலோவிற்கு ரூ.1,10,000 ஆக இருந்தது.

ஜூன் மாதத்தில் அமெரிக்க தொழிற்சாலையில் ஆர்டர்கள் குறைந்ததால், நேற்று ஸ்பாட் தங்கத்தின் விலை 0.30 சதவிகிதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,375 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலால், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது கணிசமாக வரிகளை விதிக்கப்போவதாக மிரட்டியதும், என்டிஎஃப் சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 88 ரூபாயாக சரிந்ததால் வெள்ளியின் விலை உயர்ந்தது.

இதற்கிடையில், நியூயார்க்கில் ஸ்பாட் தங்கம் விலை 20.95 டாலர் குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,352.61 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

சர்வதேச அளவில், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 37.39 அமெரிக்க டாலர்களாக வர்த்தகமானது.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

Gold prices jumped by Rs 800 to Rs 98,820 per 10 grams in the national capital on Tuesday due to heavy buying by stockists.

அசாமில் 3.65 லட்சம் இணைப்புடன் தொடரும் ஜியோ சேவை!

குவஹாட்டி: ரிலையன்ஸ், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது அசாமில் இதுவரைக்கும் 3,65,920 க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட்... மேலும் பார்க்க

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் லாபம் ரூ.292.5 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 26 சதவிகிதம் அதிகரித்து ரூ.292.5 கோடியாக உள்ளதாக ... மேலும் பார்க்க

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

மும்பை: புதுதில்லி தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக தனது அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: ஆகஸ்ட் 6 அன்று, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வங்கி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்றய பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான ... மேலும் பார்க்க

டிரம்ப் அச்சுறுத்தல்: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியதில் இருந்து சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை காலை முதலே உயர்வுடன் வர்த்தகமாகின. இ... மேலும் பார்க்க