செய்திகள் :

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

post image

ரஷியாவின் ஆளில்லா சிறிய ரக விமானங்களில் (ட்ரோன்கள்) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானில் வடிவமைக்கப்பட்டு ரஷிய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் ட்ரோன்கள், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன்களின் உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டை உக்ரைன் முன்வைத்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டுவரும், ஷாஹெட் 136 ஆளில்லா போர் வான்வழி விமானங்களில் இந்த உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் தரப்பு வெளியுறவுத் துறை மூலம் முறையாக இது குறித்து இரு முறை தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த விஷே இன்டர்டெக்னாலஜி நிறுவனத்துக்குச் சொந்தமான மின் திருத்திகள் (E300359) இந்த ட்ரோன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆரா செமிகன்டக்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாமர்கள், ட்ரோன்களின் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது,

''இந்தியாவின் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி, அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான உள்நாட்டு சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய ஏற்றுமதிகள் நமது எந்தச் சட்டங்களையும் மீறவில்லை என்பதை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க |அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கூடுதல் வரி: டிரம்ப்

Ukraine flags Indian-made parts in drones used by Russian forces

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

வங்கதேசத்தில், அடுத்தாண்டு (2026) பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது.வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரத... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரத்தில் பெண்கள்!

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால் கொல்லப்பட்ட பாலஸ்தீன ஆர்வலரின் உடலை ஒப்படைக்க வேண்டுமென, அவரது தாய் உள்பட ஏராளமான பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேற்கு கரையில், பாலஸ்தீன ஆர்வலரும், ... மேலும் பார்க்க

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

இந்தியா மீது அடுத்த 24 மணிநேரத்திற்குள் கணிசமாக வரி உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல என்றும், இந்தியாவுடன் மிகச்சிறிய அளவே வண... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவுக்கு அருகே நிலைநிறுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேற முடிவு செய்தி... மேலும் பார்க்க

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலைச் செய்யக் கூறி அவரது ஆதரவாளர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ட்ரோன் மூலம் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைபர் பக்துன்குவாவின், பண்ணு மாவட்டத்திலுள்ள ஹுவாய்த் காவல் நில... மேலும் பார்க்க