செய்திகள் :

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரத்தில் பெண்கள்!

post image

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால் கொல்லப்பட்ட பாலஸ்தீன ஆர்வலரின் உடலை ஒப்படைக்க வேண்டுமென, அவரது தாய் உள்பட ஏராளமான பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு கரையில், பாலஸ்தீன ஆர்வலரும், ஆசிரியருமான அவ்தாஹ் அல் ஹதாலின், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் ஒருவரால் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருவதாகவும், அவர்களது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, கொல்லப்பட்ட அவ்தாஹ் அல் ஹதாலினின், தாயார் கத்ரா ஹதாலின் (வயது 65) உள்பட 15 முதல் 70 வயதுக்குட்பட்ட ஏராளமான பெதூயின் பெண்கள், கருப்பு நிற உடை அணிந்து, அங்குள்ள குடிசையில் அமைதியாக அமர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டமானது, இன்று (ஆக.5) 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவ்தாஹ் அல் ஹதாலினை அவரது பிறந்த ஊரான உம் அல்- கைரில் அடக்கம் செய்ய விரும்புவதாக அவரது தாயார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

“அவ்தாஹ் அல் ஹதாலினுக்கு எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் மரியாதைக்குரிய இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுபோன்று, எங்களுக்கு நடக்க நாங்கள் என்ன செய்தோம்? நாங்கள் எந்தவொரு தவறும் செய்யவில்லை” என அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, அவ்தாஹ் அல் ஹதாலினுக்கும், இஸ்ரேலைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர் யினோன் லெவி என்பவருக்கும் இடையிலான வாக்குவாதத்தின்போது, யினோன் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலைச் செய்தார். இந்தச் சம்பவம் முழுவதும் பதிவான விடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

இருப்பினும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட யினோனை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, இஸ்ரேலிய நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகளால் யினோன் மீது சர்வதேச அளவில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்பட்ட அவ்தாஹ் அல் ஹதாலின், ஆஸ்கர் விருது வென்ற “நோ அதர் லேண்ட்” எனும் ஆவணப் படத்தின் இயக்குநர்களுடன் இணைந்து படப்பிடிப்பில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கூடுதல் வரி: டிரம்ப்

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

வங்கதேசத்தில், அடுத்தாண்டு (2026) பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது.வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரத... மேலும் பார்க்க

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷியாவின் ஆளில்லா சிறிய ரக விமானங்களில் (ட்ரோன்கள்) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானில் வடிவமைக்கப்பட்டு ரஷிய ராணுவத்தால் பயன்படுத்தப்பட... மேலும் பார்க்க

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

இந்தியா மீது அடுத்த 24 மணிநேரத்திற்குள் கணிசமாக வரி உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல என்றும், இந்தியாவுடன் மிகச்சிறிய அளவே வண... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவுக்கு அருகே நிலைநிறுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேற முடிவு செய்தி... மேலும் பார்க்க

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலைச் செய்யக் கூறி அவரது ஆதரவாளர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ட்ரோன் மூலம் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைபர் பக்துன்குவாவின், பண்ணு மாவட்டத்திலுள்ள ஹுவாய்த் காவல் நில... மேலும் பார்க்க