செய்திகள் :

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

post image

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

ஆயிரம் பேர் பின்தொடரவில்லை என்றால், அவர்களுக்கு நேரலை அம்சம் இருக்காது என அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களுக்குக்கான காரணம் குறித்து இன்ஸ்டாகிராம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் 200 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது, 200 கோடி கணக்குகள் இன்ஸ்டாகிராமில் உள்ளன.

புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பதிவேற்றம் செய்வதோடு மட்டுமின்றி, பலர் வணிக நோக்கத்திலும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் தயாரிப்புகளை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி விடியோக்களை பதிவிடுகின்றனர்.

இதனால், இளம் தொழில் முனைவோர்களுக்கு ஆரம்பக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் பயன்படுகிறது.

இதனிடையே, ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே நேரலை அம்சம் செயல்படும் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆயிரம் பேர் பின்தொடர்பவர்கள் இல்லாதவர்களுக்கு நேரலை அம்சம் செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்?

ஆயிரம் பேர் பின்தொடர்பவர்கள் இல்லையென்றால், நேரலை அம்சம் கிடையாது என்ற அறிவிப்புக்கு உரிய காரணத்தை இன்ஸ்டாகிராம் இதுவரை அறிவிக்கவில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆதம் மொஸ்ஸெரியும் எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

நேரலை விவாதத்தின் எண்ணிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

Instagram Limits ‘Live’ Feature To Accounts With Over 1,000 Followers: What It Means For Users

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

மும்பை: புதுதில்லி தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக தனது அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: ஆகஸ்ட் 6 அன்று, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வங்கி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்றய பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான ... மேலும் பார்க்க

டிரம்ப் அச்சுறுத்தல்: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியதில் இருந்து சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை காலை முதலே உயர்வுடன் வர்த்தகமாகின. இ... மேலும் பார்க்க

ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது.கடந்த வாரம் ஏற்றத் தாழ்வுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை வார இறுதி நாளான சனிக்கிழமை, சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந... மேலும் பார்க்க

உச்சம் தொட்ட ஆப்பிள் இந்தியா வருவாய்!

ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் இந்திய வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2025 ஏப்ரல... மேலும் பார்க்க

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

புதுதில்லி: ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றுது.இதுவே ஒரு வருடத்திற்கு முன்ப... மேலும் பார்க்க