செய்திகள் :

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

post image

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா.

சமீபத்தில் இவருக்கும் பிஜு ஜனதா தளக் கட்சி முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவுக்கு திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:

எனக்கு பங்கஜ் திரிபாதி மீது க்ரஷ்

முன்னாபய்யா இணையத் தொடரை நான் பார்த்துள்ளேன். அதை மீண்டும் பார்ப்பேன். விக்கே டோனர் பார்த்திருக்கிறேன். அந்தப் படமும் பிடிக்கும்.

எனக்கு பங்கஜ் திரிபாதி மிகவும் பிடிக்கும். அவரது மிர்ஜபூர் தொடரை முழுவதுமாகப் பார்த்துள்ளேன். அவருக்கு நான் வாய்ஸ் - நோட்ஸ் (குரல் பதிவு) அனுப்பியிருந்தேன். ஆனால், அவர் அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

எனக்கு பங்கஜ் திரிபாதி மீது க்ரஷ். அவர் மிகவும் கூலான ஒரு நடிகர் என நினைக்கிறேன். அவர் வில்லனாக நடிப்பது மிகவும் பிடிக்கும். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூரைவிட மிர்ஜாபூரில் அதிகமாக பிடிக்கும்.

குரல் பதிவுக்குப் பதிலளிக்காத பங்கஜ்

அவருக்கு அனுப்பிய குரல் பதிவில் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. உங்களுடன் ஒரு காஃபி குடிக்க வேண்டுமென எழுதினேன். அவர் அலிபாவில் வசிக்கிறார். யாருடனும் காஃபி குடிக்க செல்வதில்லை.

ஒருமுறை எம்பியும் நடிகருமான ரவி கிஷன் பங்கஜிடன் போன் செய்து கொடுத்தார். என்னால் சரியாக பேச முடியவில்லை. அவருக்கு அளித்த வாய்ஸ் - நோட்ஸ் (குரல் பதிவு) குறித்தும் மறந்துவிட்டேன் எனக் கூறினார்.

ஏற்கெனவே, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவருடன் 3 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் இன்று(ஆக. 5) 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான பின், அனில் அம்பானி இரவு 9 மணியளவில்... மேலும் பார்க்க

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தராகண்ட்டில் உத்தர்காசி மாவட்டத்தில் செவாய்க்கிழமை(ஆக. 5) மேக வெடிப்பால் அதிகனமழை பொழிந்தது. இதனால் அப்பகுதியில் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதிகளில் இர... மேலும் பார்க்க

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சட்டப்பேரவை வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு பல்வேறு... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

மணிப்பூர் மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், கடந்த பிப்ரவரி மா... மேலும் பார்க்க

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

தில்லி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை(ஆக. 4) தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை மசோதாவை (தில்லி... மேலும் பார்க்க

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க