செய்திகள் :

ஜெய்பூரில் நின்ற உக்ரைன் அதிபர் மனைவியின் விமானம் - காரணம் தெரியுமா?

post image

உக்ரைன் நாட்டின் உயர் மட்ட தூதுக்குழு சென்ற விமானம் கடந்த ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 3) ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருக்கிறது.

அந்த விமானத்தில் உக்ரைனின் முதல் பெண்மணியும் ஜனாதிபதி விளோதிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவியுமான ஒலேனா வோலோடிமிரிவ்னா ஜெலென்ஸ்கா மற்றும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் ஜெலென்ஸ்கி அரசாங்கத்தின் பிற மூத்த உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தினர்.

Olena in Japan

ஜப்பானில் உள்ள டோக்கியோ நகருக்கு ராஜாந்திர காரியங்களுக்காக சென்ற அந்த விமானம் இந்தியாவில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றுள்ளது. ஜப்பானுக்கு உயர்மட்ட தூதுக்குழு அனுப்பப்பட்டது ஏன் என்பதைப் பின்னர் பார்க்கலாம்.

இதற்கான கோரிக்கையை முன்னரே ஏற்றுக்கொண்டிருந்தது வெளியுறவுத்துறை. மேலும் உக்ரைன் தூதுக்குழு வரும்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்துக்கு ஆகஸ்ட் 1ம் தேதியே தெளிவுபடுத்தியுள்ளனர்.

பயணத்துக்கு முந்தைய சோதனைகளிலிருந்து தூதுக்குழுவுக்கு விலக்கு அளிப்பது, உரிய மரியாதை மற்றும் வசதிகள் வழங்குவது குறித்து நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Mariupol, Ukraine war

23 பேர் அடங்கிய தூதுக்குழு மாலை 6:30 மணியளவில் வந்திறங்கியிருக்கிறது. அவர்களது விமானம் எரிபொருள் நிரப்பப்படும் வரை வி.ஐ.பி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகத்தின் அதிகாரிகள் நேரில் சென்று அவர்களை வரவேற்றதுடன், அவர்களுடன் இணைந்து சிற்றுண்டி பகிர்ந்துள்ளனர்.

மீண்டும் மறுநாள் காலை 8:15 மணியளவில் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். உக்ரைன் உயர்மட்ட தூதுக்குழு ஜப்பான் உடனான உறவு குறித்த முக்கிய விவாதங்களை நிகழ்த்த சென்றுள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிரான ஜப்பானின் பொருளாதார தடைகளை அதிகரிக்கவும், உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு உதவவும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் உக்ரைன் பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன.1991ம் ஆண்டு சோவியத்தில் இருந்து பிரிந்த உக்ரைனைத் தனித்த இறையாண்மை கொண்ட நாடாக கருதிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

தற்போது இந்தியா ரஷ்யாவிடம் வர்த்தகம் கொள்வதன் மூலம் உக்ரைன் மீதான போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக ஜெலன்ஸ்கி சில முறை குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rahul: ``மதிப்புக்குரிய நீதிபதிகள் தீர்மானிக்க மாட்டார்கள்..!" - பிரியாங்கா

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ``கரு... மேலும் பார்க்க

TVK: "அதே பிரமாண்டத்தோடும் உற்சாகத்தோடும் நடைபெறும்" - மதுரை மாநாடு மாற்று தேதியை அறிவித்த விஜய்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் ஆகஸ்ட் 18 முதல் 22-க்குள் மாநாடு... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரி 24 மணி நேரத்தில் உயரும்" - மீண்டும் எச்சரித்த ட்ரம்ப்!

இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பர் இல்லை என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரி கணிசமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் மீது 25% வரி... மேலும் பார்க்க

'கொரோனா நேரத்துலகூட கக்கூஸை கழுவினோமே' - போராடும் துப்புரவு தொழிலாளர்களின் கண்ணீர் - Spot Visit

துப்புரவு பணியாளர்கள் போராட்டம்சென்னை ரிப்பன் மாளிகை பகுதி எப்போதுமே பரபரப்பாக போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாகத்தான் இருக்கும். அந்தப் பகுதி இப்போது இன்னும் பரபரப்பாக நெரிசலாக மாறியிருக்கிறது. காரண... மேலும் பார்க்க

புல்வாமா தாக்குதலில் மோடி அரசைக் குற்றம்சாட்டிய J&K Ex ஆளுநர் மறைவு; யார் இந்த சத்யபால் மாலிக்?

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போதும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியபோதும் அங்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார்.கிட்னி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு டெல... மேலும் பார்க்க