செய்திகள் :

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

post image

மணிப்பூர் மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் குடியரசுத் தலைவரின் ஆட்சியானது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அதனை ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

பிகாரில் நடைபெறும் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் சூழலில், மணிப்பூர் குறித்த தீர்மானமானது கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று (அக.5) அந்தத் தீர்மானமானது மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பிகளின் தொடர் கேள்விகளுக்கும், கோஷங்களுக்கும் இடையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையிலான மோதலானது நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உருவானது எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

“மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதலானது, இடஒதுக்கீடு குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உருவானது. இதனை, சிலர் மதக்கலவரம் எனக் கூறுவது தவறு” என அவர் பேசியுள்ளார்.

மேலும், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது முதல் ஒரேயொரு வன்முறைச் சம்பவம் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, மணிப்பூரின் முன்னாள் முதல்வர் பிரன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன்பின்னர், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சட்டப்பேரவை வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு பல்வேறு... மேலும் பார்க்க

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணம... மேலும் பார்க்க

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

தில்லி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை(ஆக. 4) தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை மசோதாவை (தில்லி... மேலும் பார்க்க

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.வாயைப் பிளந்துகொண்டு அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டு வெடித்ததில், 24 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின், குஞ்சேபார்தி கிராமத்தின் அருகில், பிரமோத் காக்கேம் (வயது 24) எனும் இளைஞர் ஒர... மேலும் பார்க்க