செய்திகள் :

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

post image

தில்லி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை(ஆக. 4) தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை மசோதாவை (தில்லி பள்ளி கல்வியில் கட்டணம் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் நிர்ணயித்தலில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடித்தல் மசோதா, 2025) திரும்பப்பெற வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த மசோதா ”தற்போதுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பலவீனப்படுத்துவதாகவும், கட்டணம் செலுத்தும் முறைகளில் வெளிப்படைத்தன்மையை களையும் நடவடிக்கையாக இருப்பதாகவும்” அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல்வேறு குறைகளை உள்ளடக்கிய இந்த மசோதா, நடுத்தர குடும்பங்கள் நலனுக்கெதிராக இருப்பதாகவும் போராடும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

இதனையடுத்து, ’யுனைடெட் வாய்ஸ் ஆஃப் பேரண்ட்ஸ்’ என்ற சங்கத்தின்கீழ் ஓரணியாக திரண்ட பெற்றோர்களால் இந்த போராட்டம் இன்று (ஆக. 5) நடைபெற்றது. தில்லியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்களும் பங்கேற்றனர்.

மசோதாவை திரும்பப்பெற பெற்றோர்கள் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளதால் தில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

Parents protest outside Delhi Assembly, seek rollback of school fee regulation bill .

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சட்டப்பேரவை வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு பல்வேறு... மேலும் பார்க்க

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணம... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

மணிப்பூர் மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், கடந்த பிப்ரவரி மா... மேலும் பார்க்க

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.வாயைப் பிளந்துகொண்டு அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டு வெடித்ததில், 24 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின், குஞ்சேபார்தி கிராமத்தின் அருகில், பிரமோத் காக்கேம் (வயது 24) எனும் இளைஞர் ஒர... மேலும் பார்க்க