செய்திகள் :

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

post image

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஆச்சரியத்துக்குரிய பாபா வங்கா, ஆகஸ்ட் மாதம் இரட்டை நெருப்புப் பிழம்புகள் உருவாகும் என்ற கணிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த 1996ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்ட பாபா வங்கா என்ற பல்கேரியப் பெண்ணின் கணிப்புகள் இன்றும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகின்றன.

பாபா வங்கா என்று அறியப்படும் அப்பெண், கண் பார்வையை இழந்த நிலையில், எதிர்காலத்தில் நிகழும் சம்பவங்களை அறியும் திறன் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது பல கணிப்புகள் நடந்தும் உள்ளன.

இயற்கை உள்ளிட்ட பல்வேறு பேரிடர்கள் குறித்த அவரது கணிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும், மக்களின் நம்பிக்கை மட்டும் மாறவில்லை.

அந்த வகையில், பல்கேரிய நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு வெளியாகியிருக்கிறது. இரட்டை நெருப்புப் பிழம்புகள் என்பதே அது.

ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியிருக்கும் அந்த இரட்டை நெருப்புப் பிழம்புகள் குறித்த விளக்கத்தில், ஒரே வேளையில் பூமியிலிருந்தும், வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள் தோன்றும். இது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை, பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

அதாவது, காட்டுத் தீ அல்லது எரிமலை சீற்றம் போன்றவற்றுடன், எரிகற்கள் தாக்குவது அல்லது வானிலை மாற்றங்களால் கடுமையான மின்னல் தாக்குவது போன்றவை நிகழலாம் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பாபா வங்கா மற்றொரு கணிப்பையும் பதிவு செய்திருக்கிறார். மக்கள் விரும்பாத, மக்களின் சக்தியை தாண்டிய அறிவுக்கு மிகவும் நெருக்கமாவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, திறக்கப்பட்டது ஒருபோதும் மூடப்படாது என்றும் சொல்லியிருக்கிறார்.

இதற்கு, பயோ டெக்னாலஜி அல்லது செயற்கை நுண்ணறிவைத்தான் பாபா வங்கா முன்கூட்டியே கணித்திருக்கிறாரோ என்று மக்கள் கருதுகிறார்கள்.

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.வாயைப் பிளந்துகொண்டு அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டு வெடித்ததில், 24 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின், குஞ்சேபார்தி கிராமத்தின் அருகில், பிரமோத் காக்கேம் (வயது 24) எனும் இளைஞர் ஒர... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறாண்டுகள் நிறைவடைந்ததையொட... மேலும் பார்க்க

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் கொள்முதல் செய்யவிருப்பதாக பாதுகாப்பு துறையை சார்ந்த உயர்நிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு விவகார அமைச்சகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில், இந்திய கடற்படை போர் க... மேலும் பார்க்க

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

மாலைப்பாங்கான மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் அமைக்கும்போது கூடுதல் கிலோமீட்டர் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேரள அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க