செய்திகள் :

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

post image

பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் கொள்முதல் செய்யவிருப்பதாக பாதுகாப்பு துறையை சார்ந்த உயர்நிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு விவகார அமைச்சகத்தின் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில், இந்திய கடற்படை போர் கப்பல்களுக்கும் விமானப்படைக்கும் தரையிலிருந்தும் வானிலிருந்தும் ஏவப்படும் திறன்வாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களைக் குறிவைத்து அழிக்க பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகள்வில் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது இந்திய விமானப்படையின் முதன்மை தேர்வாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கடற்படையின் ‘வீர்’ பிரிவு போர்க்கப்பல்களிலும், விமானப்படையின் ‘சு-30 எம்கேஐ’ பிரிவு போர் ஜெட் விமானங்களிலும் பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தவிருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதையும் படிக்க:அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

brahmos missiles huge ordering soon

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

மணிப்பூர் மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், கடந்த பிப்ரவரி மா... மேலும் பார்க்க

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

தில்லி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை(ஆக. 4) தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை மசோதாவை (தில்லி... மேலும் பார்க்க

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.வாயைப் பிளந்துகொண்டு அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டு வெடித்ததில், 24 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின், குஞ்சேபார்தி கிராமத்தின் அருகில், பிரமோத் காக்கேம் (வயது 24) எனும் இளைஞர் ஒர... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் ஆறாண்டுகள் நிறைவடைந்ததையொட... மேலும் பார்க்க