செய்திகள் :

சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!

post image

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஊபர் செயலியில் பதிவுசெய்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என ஊபர் அறிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் சென்னைவாசிகள் பலரும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருவது நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

மேலும். ஆட்டோ கட்டணம் மற்றும் இருசக்கர வாகனத்துக்கான பெட்ரோல் செலவைவிட மெட்ரோ ரயில் டிக்கெட் குறைவாக இருப்பதும் ஒரு காரணமே.

அதற்கேற்றாற்போல, டிக்கெட் கவுன்டர்களில் வரிசைகளில் நின்று டிக்கெட் பெறுவதை எளிதாக்கும் நோக்கில், யுபிஐ செயலிகளில் டிக்கெட் பதிவுசெய்தால், 20 சதவிகிதம்வரையில் தள்ளுபடியும் உண்டு.

இந்த நிலையில், சென்னை மெட்ரோவுடன் கைகோர்த்துள்ள ஊபர் செயலியும், டிக்கெட் விலையில் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது.

தில்லி மெட்ரோ ரயிலுடன் இணைந்த ஊபர், தற்போது சென்னை மெட்ரோவுடனும் இணைந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெடுடன் இணைந்துள்ள ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) நிறுவனமானது, ஊபர் செயலியை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக பதிவுசெய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கும் அல்லது முடிவடையும் ஊபர் ஆட்டோ அல்லது மோட்டோ பயணங்களுக்கும் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்தத் தள்ளுபடியானது இம்மாத இறுதிவரை (ஆகஸ்ட் 31) மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chennai Metro Rail Limited Introduces Metro Ticketing in UBER App

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க