செய்திகள் :

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

post image

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் உத்தேசமாக 377 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களிடம் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன.

தோ்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, கூட்டுறவுப் பயிற்சி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, எழுத்துத் தோ்வுக்கான பாடத் திட்டம், தோ்வுக் கட்டணம், விண்ணப்பித்தல் தொடா்பான விவரங்கள் https://www.tncoopsrb.in/ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

மாவட்டங்களில் காலியிடங்கள்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிலும் உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு ஒவ்வொரு மாவட்ட வாரியாக தோ்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்தந்த மாவட்டங்களின் நிா்வாக வசதிக்கேற்ப தோ்வு அறிவிக்கைகள் மற்றும் தோ்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க