செய்திகள் :

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

post image

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர் தனது ஆசிரமத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சூரத்தை சேர்ந்த அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கியது.

வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபுவின் தற்காலிக ஜாமீனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, ஆசாராம் பாபுவுக்கு கடந்த 2018-ல் முதல்முறையாக 7 நாள்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, அது 5 நாள்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதேபோல, கடந்த டிசம்பா் 10, 2024-ல் 17 நாள்கள் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, ஆசாராம் பாபுவின் உடல்நிலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் 31 வரை அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் இலேஷ் ஜே வோரா மற்றும் நீதிபதி பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்டனர்.

ஜூலை 3 ஆம் தேதி இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் ஆசாராமின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால், அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்ற விலக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தற்காலிக ஜாமீனை நீட்டிக்கக் கோரி, ஆசாராம் பாபு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதன்படி, அவரது இடைக்கால ஜாமீன் மீண்டும் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Gujarat HC Extends Asaram Bapu's Temporary Bail Till August 21 In Rape Case

இதையும் படிக்க : குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “ஆசாதி” உள்பட 25 புத்தகங்களுக்கு, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அருந்ததி ராய், ஏஜி நூர... மேலும் பார்க்க

பாஜகவின் பிரதிநிதியாக தேர்தல் ஆணையம்! - கார்கே விமர்சனம்

ஆளும் பாஜக அரசின் பிரதிநிதியாக இந்தியத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆத... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்: 50 பேர் மாயம்! மீட்புப் பணியில் விமானப் படை!

உத்தரகண்ட் மாநிலத்தில், மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. உத்தரகாசி மாவட்டத்தில், கடந்த ஆக.5 ஆம் தேத... மேலும் பார்க்க

ராகுலின் மூளைதான் திருடுபோய்விட்டது..! மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ் கடும் தாக்கு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் மூளை திருடுபோய்விட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேட... மேலும் பார்க்க

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மத்திய அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடு... மேலும் பார்க்க

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

புது தில்லி: அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுவதாக உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறையால் நடத்தப்பட... மேலும் பார்க்க