செய்திகள் :

துர்நாற்றம் வீசும் 'கார்ப்ஸ் பூ' பூப்பதை காண திரண்ட மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

post image

போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான, வார்சா தாவரவியல் பூங்காவில் துர்நாற்றம் வீசும் கார்ப்ஸ் பூ ( Corpse flower) பூப்பதை காண ஏராளமான மக்கள் கூடியுள்ளனர்.

இந்த அரிய வகை தாவரம் அதன் தனித்துவமான தோற்றத்திற்கும் அதிகமான துர்நாற்றத்திற்கும் பெயர் பெற்றதாக உள்ளது. இருப்பினும் இதன் அழகையும் அசாதாரணமான அதன் தன்மையும் காண பலரும் விரும்புகின்றனர்.

இந்த கார்ப்ஸ் பூ அழிந்து வரும் தாவர வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

united state botanic gardern

இது கடைசியாக 2021 ஆம் ஆண்டு பூத்த போது நான்கு முதல் ஆறு மணி நேரம் மட்டுமே நிலைத்தன்மையில் இருந்துள்ளது. இந்த முறை பார்ப்பதற்கு அபூர்வமான நிகழ்வாக உள்ளதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பூவின் துர்நாற்றம் கெட்டுப்போன இறைச்சியை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் இந்த பூவை உலகம் முழுவதிலும் உள்ள தாவர ஆர்வலர்கள் கண்டு ரசிக்கின்றனர்.

இந்தப் பூவின் பூப்பு சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்திற்கும் என்பதால் இதனை காண்பது மிகவும் அரிதான அனுபவமாக கருதப்படுகிறது.

எனவே இதனை பார்க்க ஏராளமான மக்கள் அங்கு குவிகின்றனர். இந்த நிகழ்வை அவர்களின் தொலைபேசிகளிலும் பதிவு செய்கின்றனர்.

இந்த கார்ப்ஸ் பூ இயற்கையிலேயே துர்நாற்றம் வீசும் ஒன்றாக அமைந்துள்ளது. அரிதாக பூக்கும் இந்த பூவினை தாவரவியல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கிய நிகழ்வாகவே கருதுகின்றனர்.

இந்த அரிய வகை தாவரத்தை பாதுகாக்கவும் இதன் தனித்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கவும் முயற்சிகள் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பசிபிக் பெருங்கடலில் எதிரொலித்த ’பெண் குரல்’ போன்ற மர்ம ஒலி; விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியது ஏன்?

பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் எதிரொலித்த ஒரு விசித்திரமான ஒலி விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆக்கியுள்ளது. 1999 ஆண்டு ஒலித்த இந்த மர்மமான ஒலி விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியாத புதிராக இருக்கிறது. அமெரிக்கா... மேலும் பார்க்க

ஸ்வீடன்: கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் முட்டை உற்பத்தி செய்துவரும் நாடு - பின்னணி என்ன?

உலகளவில் 'விலங்குகள் நலன்’ முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன் முட்டை உற்பத்தியில் கூண்டுகளை முழுமையாக நீக்கி, அனைத்து கோழிகளையும் கூண்டு இல்லாமல் வளர்க்கும் முதல் நாடாக மாறியுள்ளது. எந்தவொரு அர... மேலும் பார்க்க

3500 ஏக்கர்; பிரபலமான மரக்காணம் உப்பளம்! - பிரமிப்பை ஏற்படுத்தும் டிரோன் காட்சிகள் | Album

மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி – கேரள வனத்துறை முடிவுக்கு காரணம் இதுதான்!

கேரள மாநிலத்தில் மலைகள் ஆறுகள் வனப்பகுதி ஆகியவைகளை இயற்கையாகவே பராமரிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது அரசு. மக்களும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதுகக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். அதேச... மேலும் பார்க்க

ஹவாய் தீவுகளில் ட்ரோன்கள் மூலம் விடப்படும் கொசுக்கள் - என்ன காரணம் தெரியுமா?

ஹவாய் தீவில் உள்ள கொசுக்களை அழிக்க ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் விடப்படுகின்றன. கொசுக்களை அழிக்க கொசுக்களையே விடுகிறார்களா என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால் இது ஒரு பறவை இனங்களை பாதுகாக்க எடுக... மேலும் பார்க்க