செய்திகள் :

பசிபிக் பெருங்கடலில் எதிரொலித்த ’பெண் குரல்’ போன்ற மர்ம ஒலி; விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியது ஏன்?

post image

பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் எதிரொலித்த ஒரு விசித்திரமான ஒலி விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆக்கியுள்ளது. 1999 ஆண்டு ஒலித்த இந்த மர்மமான ஒலி விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியாத புதிராக இருக்கிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்தான் (NOAA) முதன் முதலில் இந்த ஒலியைப் பதிவுசெய்தது.

இது ஒரு பெண்ணின் குரலைபோல் ஒலிப்பதாக சிலர் விவரித்தனர். ஆனால் இந்த ஒலியின் அர்த்தம் குறித்த சரியான காரணங்கள் இன்று வரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

’ஜூலியா’ என்று பெயரிடப்பட்ட இந்த ஒலி சுமார் மூன்று நிமிடங்கள் நீடித்திருக்கிறது. இது 3000 மைல்களுக்கு அப்பால் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Ocean

இந்த ஒலி ஒரு பெண் முணுமுணுப்பதைப் போல் இருப்பதாக சிலர் கூறியிருக்கின்றனர். ஆனால் 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன் சரியான தோற்றம் அல்லது காரணம் பற்றித் தெளிவான விளக்கங்கள் இல்லை என்று LADbible சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

NOAA விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த ஒலி மார்ச் 1 1999 அன்று கிழக்கு பசிபிக் பகுதியில் உள்ள தானியங்கி ஹைட்ரோபோன் அமைப்புகள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஜூலியா என்று அழைக்கப்பட்ட இந்த ஒலி அண்டார்டிகாவில் தரையில் தங்கிய ஒரு பெரிய பாறை மூலம் வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இந்த ஒலி குறித்த சரியான காரணங்கள் இல்லாததால் பலரும் பல்வேறு விதமான கோட்பாடுகளை இதற்கு முன்வைக்கின்றனர். சிலர் இந்த ஒலி நீருக்கடியில் பயணிக்கும் வேற்றுக்கிரக கப்பலால் உருவானது என்று கூறுகின்றனர்.

ஜூலியா ஒலி இயற்கையான நிகழ்வாகக் கூட இருக்கலாம் என்று ஒரு பக்கம் விஞ்ஞானிகள் கூறிவந்தாலும், இந்த ஒலிக்கான சரியான காரணம் வெளிப்படாததால் இன்றும் அது மர்மமாகவே உள்ளது.

ஸ்வீடன்: கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் முட்டை உற்பத்தி செய்துவரும் நாடு - பின்னணி என்ன?

உலகளவில் 'விலங்குகள் நலன்’ முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன் முட்டை உற்பத்தியில் கூண்டுகளை முழுமையாக நீக்கி, அனைத்து கோழிகளையும் கூண்டு இல்லாமல் வளர்க்கும் முதல் நாடாக மாறியுள்ளது. எந்தவொரு அர... மேலும் பார்க்க

3500 ஏக்கர்; பிரபலமான மரக்காணம் உப்பளம்! - பிரமிப்பை ஏற்படுத்தும் டிரோன் காட்சிகள் | Album

மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி – கேரள வனத்துறை முடிவுக்கு காரணம் இதுதான்!

கேரள மாநிலத்தில் மலைகள் ஆறுகள் வனப்பகுதி ஆகியவைகளை இயற்கையாகவே பராமரிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது அரசு. மக்களும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதுகக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். அதேச... மேலும் பார்க்க

ஹவாய் தீவுகளில் ட்ரோன்கள் மூலம் விடப்படும் கொசுக்கள் - என்ன காரணம் தெரியுமா?

ஹவாய் தீவில் உள்ள கொசுக்களை அழிக்க ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் விடப்படுகின்றன. கொசுக்களை அழிக்க கொசுக்களையே விடுகிறார்களா என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால் இது ஒரு பறவை இனங்களை பாதுகாக்க எடுக... மேலும் பார்க்க

கேரள பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பதில் மழைக்கால விடுமுறை - புதிய விவாதம்; நீங்க என்ன நினைக்குறீங்க?

நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல், மே மாதங்களில் விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேசமயம் மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதும... மேலும் பார்க்க