செய்திகள் :

ஸ்வீடன்: கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் முட்டை உற்பத்தி செய்துவரும் நாடு - பின்னணி என்ன?

post image

உலகளவில் 'விலங்குகள் நலன்’ முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன் முட்டை உற்பத்தியில் கூண்டுகளை முழுமையாக நீக்கி, அனைத்து கோழிகளையும் கூண்டு இல்லாமல் வளர்க்கும் முதல் நாடாக மாறியுள்ளது.

எந்தவொரு அரசாங்க தடையுமின்றி, தன்னார்வ முயற்சியால் இதனை மாற்றியுள்ளனர்.

1988 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றம் கூண்டு முறையை தடை செய்ய வாக்கெடுப்பு நடத்திய போதிலும், அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை.

கூண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. 2000களின் தொடக்கத்தில் ஸ்வீடனில் சுமார் 40% முட்டைக் கோழிகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன.

அதன்பிறகு, சில்லறை விற்பனையாளர்கள் முதல் உணவு சேவை நிறுவனங்கள் வரை 85க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், முட்டைக் கோழிகள் கூண்டுகளில் இல்லாததை உறுதியளித்தன.

2024 ஆம் ஆண்டுகளில், கூண்டு அடைப்பு முறைகள் 1%க்கும் கீழே குறைந்து, ஒரு வருடத்தில் 90,000 கோழிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அனைத்து கூண்டுகளும் காலியாகி, 2008 முதல் 17 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கூண்டு அடைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன.

அரசாங்க சட்டத்தால் இது மாற்றமடையவில்லை, மக்களின் அழுத்தம் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புணர்வால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விலங்கு நல ஆர்வலர்கள், சட்டரீதியான தடை இல்லையெனில் இந்த முன்னேற்றம் பின்னடைவை அடையலாம் என எச்சரிக்கின்றனர். கூண்டு வளர்ப்பை முற்றிலும் தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

ஸ்வீடனின் இந்த மாற்றம் பல நாடுகளை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.

3500 ஏக்கர்; பிரபலமான மரக்காணம் உப்பளம்! - பிரமிப்பை ஏற்படுத்தும் டிரோன் காட்சிகள் | Album

மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி – கேரள வனத்துறை முடிவுக்கு காரணம் இதுதான்!

கேரள மாநிலத்தில் மலைகள் ஆறுகள் வனப்பகுதி ஆகியவைகளை இயற்கையாகவே பராமரிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது அரசு. மக்களும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதுகக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். அதேச... மேலும் பார்க்க

ஹவாய் தீவுகளில் ட்ரோன்கள் மூலம் விடப்படும் கொசுக்கள் - என்ன காரணம் தெரியுமா?

ஹவாய் தீவில் உள்ள கொசுக்களை அழிக்க ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் விடப்படுகின்றன. கொசுக்களை அழிக்க கொசுக்களையே விடுகிறார்களா என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால் இது ஒரு பறவை இனங்களை பாதுகாக்க எடுக... மேலும் பார்க்க

கேரள பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பதில் மழைக்கால விடுமுறை - புதிய விவாதம்; நீங்க என்ன நினைக்குறீங்க?

நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல், மே மாதங்களில் விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேசமயம் மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதும... மேலும் பார்க்க

தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவல்!

பொதுவாக காக்கைகள் நம் அன்றாட பார்க்கக்கூடிய ஒரு பறவை இனமாகும். இவை மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிக அறிவாற்றல் திறனுக்காக தனித்துவம் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட நபர்கள் காகத்த... மேலும் பார்க்க