செய்திகள் :

குர்மீத் ராம் ரஹீமுக்கு 14 -வது முறையாக பரோல்! 2025 இல் மூன்றாவது முறை!

post image

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கி ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம், 2017 முதல் 14-வது முறையாக பரோலில் வெளிவந்துள்ளார்.

ஹரியாணாவின் சுனாரியா சிறைச் சாலையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை பரோலில் வெளிவந்த குர்மீத் ராம், சிர்சாவின் உள்ள ஆசிரமத்துக்கு சென்றுள்ளார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிறந்த நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 முறை பரோல்

இந்தாண்டு மட்டும் மூன்றாவது முறையாக குர்மீத் ராமுக்கு பரோல் வழங்கியிருக்கிறது ஹரியாணா அரசு. முன்னதாக, ஏப்ரல் மாதம் 21 நாள்களும் ஜனவரி மாதம் 30 நாள்களும் பரோலில் வெளிவந்துள்ளார்.

கடந்தாண்டு ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அக்டோபர் மாதம் 21 நாள்கள் பரோலில் வந்துள்ளார். ஆகஸ்ட், ஜனவரி மாதங்களிலும் பரோல் வழங்கப்பட்டிருந்தது.

இதுவரை தண்டனை காலங்களில் 326 நாள்கள் சிறைக்கு வெளியே பரோலில் இருந்துள்ளார்.

ஹரியாணா, பஞ்சாப், தில்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இவரின் ஆதரவாளர்கள் இருக்கும் நிலையில், அந்த மாநிலங்களின் தேர்தலையொட்டி, குர்மீத் ராமுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.

எனினும், தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கவும், கூட்டங்களில் உரையாற்றவும், தேர்தலின்போது மாநிலத்தில் தங்குவதற்கும் இவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Gurmeet Ram Rahim granted parole for the 14th time

இதையும் படிக்க : ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

தேசிய தலைநகர் அருகே சட்டவிரோதமாக வசித்துவந்த ஐந்து வங்கதேசத்தினர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் தில்லிய... மேலும் பார்க்க

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

புனேவில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கையில் பணமில்லாததால், நடைபாதையில் படுத்துறங்கிய காட்சியும், அவர் நிறுவனத்தின் மீது வைத்திருந்த குற்றச்சாட்டும் சமூக வலைதளத்தில் வைரலாகிய... மேலும் பார்க்க

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மாதத்துக்கும் ம... மேலும் பார்க்க

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வாழ்க்கைப் பயணம் என்பது, மாணவர் தலைவராகத் தொடங்கி, அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டு, லட்சியங்கள், சர்ச்சைகள், அரசியல் சாதனைகளின் பட்டியலுடன் நீள்... மேலும் பார்க்க

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 20 விடுதிகள் சேதம்..12 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால், கனமழை பெய்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில், இன்று (ஆக.5) திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வரு... மேலும் பார்க்க

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்ப... மேலும் பார்க்க