செய்திகள் :

ஆக. 21-ல் மாநாடு: காவல் துறைக்கு தவெக கடிதம்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை ஆக. 21 ஆம் தேதி நடத்த காவல் துறையினருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தியில் மாநாட்டுக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த மாதம் 29-ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த் மதுரைக்கு வந்தார். அப்போது, அவா் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்தை சந்தித்து பேசினார்.

அப்போது, மாநாடு நடைபெறும் 25- ஆம் தேதியை தொடர்ந்து 27- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், விநாயகர் சதுர்த்தி வருகிற 27- ஆம் தேதி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருக்கும் எனக் கூறி காவல் துறை சாா்பில் த.வெ.க. மாநாடு தேதியை மாற்றுவதற்கு யோசனை தெரிவித்தனர்.

இதன்படி, வருகிற 18- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை ஒரு தேதியை நீங்கள் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

காவல் துறை கூறிய தேதிகளில் ஒன்றான ஆக. 21 ஆம் தேதியை தேர்வு செய்து மாநாடு நடந்த காவல் துறையினரிடம் தவெக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,, மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பை விஜய் இன்று(ஆக. 5), அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்!

A letter has been sent to the police department on behalf of the Tamil Nadu Victory Party to hold the 2nd state conference on August 21st.

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

கார் விபத்து தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக தொடரப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த மே 2 ஆம் தேதி ... மேலும் பார்க்க

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்... மேலும் பார்க்க

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9 ஆம் தேதி திறந்துவைக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இ... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழத்தில் கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள... மேலும் பார்க்க

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

உதகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். ஆய்வாளர் தீபக் தலைமையினலான 10 பேர் கொண்ட குழு உதகையை வந்தடைந்தனர்.வால்பாறையில் ஏற்கெனவே ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டில் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி -க்கு இன்று(செவ்வாய்க்கிழமை) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராமதாஸின் தனிச்செயலர் பி.சுவா... மேலும் பார்க்க