செய்திகள் :

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

post image

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டில் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி -க்கு இன்று(செவ்வாய்க்கிழமை) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமதாஸின் தனிச்செயலர் பி.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் இல்லத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, இணைய வசதிகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், ராமதாஸின் இல்ல நிகழ்வுகள் மற்றும் கைப்பேசி உரையாடல்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு மாற்று நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சசிக்குமார், அன்புமணியின் நிதிச்செயலர் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அந்த புகார் மனுவில் பி .சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

A complaint was filed with the Kottakuppam DSP today alleging that the phone at the home of PMK founder Dr. Ramadoss was hacked.

ஆக. 21 மதுரையில் தவெக மாநாடு: விஜய்

மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

கார் விபத்து தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக தொடரப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த மே 2 ஆம் தேதி ... மேலும் பார்க்க

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்... மேலும் பார்க்க

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9 ஆம் தேதி திறந்துவைக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இ... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழத்தில் கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள... மேலும் பார்க்க

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

உதகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். ஆய்வாளர் தீபக் தலைமையினலான 10 பேர் கொண்ட குழு உதகையை வந்தடைந்தனர்.வால்பாறையில் ஏற்கெனவே ... மேலும் பார்க்க