பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்கான சான்றுகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
பல்வேறு தொகுதிகளில் நடந்த முறைகேடுகளை தனித்தனியாக எடுத்துக் காட்டி அதற்கான தரவுகளுடன் அவர் வெளியிட்டிருப்பது, தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடுவதாகவே உள்ளது.
குறிப்பாக, ராகுல் காந்தி சுட்டிக்காட்டியிருக்கும் மகாதேவபுரா தொகுதியில் அதிகக் கவனம் பெற்றுள்ளது.
அதாவது, கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் தேர்தல் முடிவு மற்றும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து ராகுல் கூறியிருப்பதாவது, கர்நாடக மாநிலத்தின் ஒரு மண்டலத்தில் மொத்தமிருந்த 7 தொகுதிகளில் ஆறு தொகுதிகளை வென்ற காங்கிரஸ் மகாதேவபுரா தொகுதியில் தோல்வியடைந்தது. அதுவும் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில்.