செய்திகள் :

இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய கர்நாடக இளைஞர் கைது

post image

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை விரித்து 26 பவுன் நகைகளை அபகரித்துச் சென்ற லிபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் கர்நாடகா மாநிலம் சிராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிவின் என்ற வாலிபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி நேரில் இரு முறை சந்தித்துள்ளார். அப்போது நாம் திருமணம் செய்து கொண்டால் தனியாகக் குடித்தனம் நடத்த பணம் தேவைப்படும். ஆகையால் உங்கள் வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தைக் கொண்டு வருமாறு கல்லூரி மாணவியிடம் கூறியுள்ளார்.

லிவின்
லிவின்

இதனை நம்பிய கல்லூரி மாணவி சுமார் 26 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மதுரையில் வைத்து லிவினிம் வழங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த பணம் நகைகள் மாயமானது தொடர்ந்து செந்தில்குமார் தனது மனைவி மற்றும் மகளிடம் விசாரித்த நிலையில், தான் அந்தப் பணம் மற்றும் நகைகளை எடுத்து லிவினிடம் கொடுத்ததாக மகள் கூறியுள்ளார்.

அப்போது அவருக்கு போன் செய்த லிவின், "நீ கொடுத்த பணம் பத்தாது. மேலும் பணம் வேண்டும். ஆகையால் அதை ஏற்பாடு செய்" என்று கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த அந்தப் பெண் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் பெற்றோருடன் சென்று புகார் அளித்துள்ளார்.

ராஜபாளையம்
ராஜபாளையம்

போலீசாரின் அறிவுறுத்தலின்படி லிவினை இராஜபாளையம் ஆவாரம்பட்டிக்கு வரவழைத்து அவரிடம் கல்லூரி மாணவி பணத்தைக் கொடுக்க முயன்ற போது மறைந்திருந்த போலீசார் லிவினைச் சுற்றி வளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிய லிவின் தனது சொந்த மாநிலத்திற்கு ஓடிவிட்டார்.

இதனையடுத்து கர்நாடக மாநிலம் சிராஜ்பேட்டையில் வைத்து லிவினைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் தனது நண்பரின் மூலம் வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருப்பதை அறிந்த போலீசார் 21 பவுன் தங்க நகைகளை மீட்டு லிவினை அழைத்துக் கொண்டு இராஜபாளையம் திரும்பினர்.

தொடர்ந்து லிவினிடம் விசாரித்த போலீசார் சமூக வலைத்தளம் மூலம் இந்தப் பெண்ணை மட்டும் தான் ஏமாற்றினாரா அல்லது இது போல் வேறு யாரையாவது ஏமாற்றி இருக்கிறாரா என விசாரணை நடத்தி இராஜபாளையம் நீதித்துறை நடுவர் என் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருப்பூர்: ரூ.50 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை; தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்; கணவர் குடும்பம் கைது

திருப்பூர் தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. பிளீச்சிங் ஆலை நடத்தி வந்த குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சுகந்தி. இந்தத் தம்பதியின் ஒரே மக... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் முக்கிய குற்றவாளி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமம் உள்ளது. அங்கு மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தோட்டப்பராமரிப்புக்காக திண்டு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்க... மேலும் பார்க்க

மசினகுடி: தந்தங்கள் மாயமான நிலையில் கிடந்த யானையின் எலும்புக்கூடு; வனத்துறை விசாரணை!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், மசினகுடி அருகில் உள்ள பொக்குபுரம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் யானையின... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - ஆண் நண்பருடன் கைதானவரின் பகீர் பின்னணி!

சென்னை, ஆவடி பகுதியில் வசித்து வருபவர் மணி (47). இவர் கடந்த 27.07.2025-ம் தேதி அவருக்கு தெரிந்த பெண் தோழி தீபிகா என்பவருடன் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்க... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து ஸ்கெட்ச்; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி சிக்கியது எப்படி?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மனைவிதான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து யூடியூப் வீடியோ பார்த்து திட்டம் போட்டு கொலைசெய்திருக்கிறார் என்பது வெளிச்... மேலும் பார்க்க