செய்திகள் :

திருப்பூர்: ரூ.50 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை; தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்; கணவர் குடும்பம் கைது

post image

திருப்பூர் தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. பிளீச்சிங் ஆலை நடத்தி வந்த குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சுகந்தி. இந்தத் தம்பதியின் ஒரே மகள் பிரீத்தி (26). ஐ.டி. ஊழியராகப் பணியாற்றி வந்த பிரீத்திக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சதீஷ்வர் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தத் திருமணத்தின்போது, தாய் சுகந்தி தனது மகள் பிரீத்திக்கு 120 பவுன் நகை, ரூ. 25 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான சொகுசு கார் ஆகியவற்றைத் தந்துள்ளார்.

பிரீத்தி-சதீஷ்வர்
பிரீத்தி-சதீஷ்வர்

திருமணத்திற்குப் பிறகு கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோர் பிரீத்தியைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த மாதம் 11-ஆம் தேதி தனது தாய் வீட்டுக்கு பிரீத்தி வந்துள்ளார். இந்நிலையில், பிரீத்தியின் குடும்பச் சொத்து அண்மையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதில், பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்தப் பணத்தைத் தன்னிடம் தருமாறு சதீஷ்வர் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால், மனமுடைந்த பிரீத்தி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, நல்லூர் போலீஸார் பிரீத்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வரதட்சணை கொடுமை காரணமாக தனது மகள் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணமாக சதீஷ்வர், விஜயகுமார், உமா ஆகிய மூவரைக் கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என பிரீத்தியின் தாய் சுகந்தி தெரிவித்தார்.

திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் பிரீத்தியின் தற்கொலை தொடர்பாக திருப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அதில், வரதட்சணை காரணமாக பிரீத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சுகந்தி
சுகந்தி

இதைத் தொடர்ந்து, பிரீத்தியின் தாய் சுகந்தி அளித்த புகாரின் அடிப்படையில், பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வரதட்சணை காரணமாக இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட நிலையில், வரதட்சணை காரணமாக மீண்டும் ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய கர்நாடக இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை விரித்து 26 பவுன் நகைகளை அபகரித்துச் சென்ற லிபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் முக்கிய குற்றவாளி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமம் உள்ளது. அங்கு மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தோட்டப்பராமரிப்புக்காக திண்டு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்க... மேலும் பார்க்க

மசினகுடி: தந்தங்கள் மாயமான நிலையில் கிடந்த யானையின் எலும்புக்கூடு; வனத்துறை விசாரணை!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், மசினகுடி அருகில் உள்ள பொக்குபுரம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் யானையின... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - ஆண் நண்பருடன் கைதானவரின் பகீர் பின்னணி!

சென்னை, ஆவடி பகுதியில் வசித்து வருபவர் மணி (47). இவர் கடந்த 27.07.2025-ம் தேதி அவருக்கு தெரிந்த பெண் தோழி தீபிகா என்பவருடன் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்க... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து ஸ்கெட்ச்; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி சிக்கியது எப்படி?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மனைவிதான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து யூடியூப் வீடியோ பார்த்து திட்டம் போட்டு கொலைசெய்திருக்கிறார் என்பது வெளிச்... மேலும் பார்க்க