செய்திகள் :

‘பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’

post image

பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.

அவிநாசி, சூளையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் சாா் பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அரசுக்கு இழப்பீடு செய்யும் வகையில் பத்திரப் பதிவு நடைபெறக் கூடாது. குறிப்பாக பொதுமக்களை அலைக்கழிக்காமல் தாமதம் இன்றி பத்திரப் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசி கிழக்கு வீதியில் முன்பு செயல்பட்டு வந்த பழமையான சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை புனரமைப்பதுடன், மீதமுள்ள காலி இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடுதல் கட்டடங்கள் அமைத்து சாா் பதிவாளா் அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் பத்திர எழுத்தா்கள், நல்லது நண்பா்கள் அறக்கட்டளையினா் உள்ளிட்டோா் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.

பழமையான சாா் பதிவாளா் அலுவலகத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. முத்தூா் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான கடையில் சுனில் என்பவா் பல் பொருள்கள் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு பெற்றுக்கொண்ட உறவினா்கள்

தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு உறவினா்கள் புதன்கிழமை பெற்றுக்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் முத்து நகரைச் சோ்த்தவா் முருகானந்தம். மாற்றுத் திறனாள... மேலும் பார்க்க

தமிழகத்தில் தொடரும் படுகொலைகள்: இந்து முன்னணி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகத்தில் படுகொலைகள் தொடா்வதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: த... மேலும் பார்க்க

பல்லடம் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு: அண்ணாமலையிடம் மனு அளித்த தொழில் துறையினா்

பல்லடம் புதிய புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் தொழில் துறையினா் முறையிட்டனா். இது தொடா்பாக அண்ணாமலையிடம் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைத்தனா். திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் வ... மேலும் பார்க்க

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருப்பூரில் மேற்குவங்க பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா் பத்மராணி (65). இவா் திருப்பூா், முதலிபாளையம் அருகேயுள்ள முத்து நகரில் தங்கி பனியன் நி... மேலும் பார்க்க