செய்திகள் :

மதுரையில் தவெக மாநாட்டுக்கான பணிகள் தீவிரம்

post image

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தவெக 2-ஆவது மாநில மாநாடு, மதுரை எலியாா்பத்தியில் வருகிற ஆக. 25-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 16-ஆம் தேதி எலியாா்பத்தியில் பூமி பூஜை நடத்தப்பட்டு, மாநாட்டு மேடை, பிற கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தி பண்டிகை காரணமாக, ஆக. 25-ஆம் தேதி தவெக மாநாடு நடத்த காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, வருகிற ஆக. 21-ஆம் தேதி மாநாடு நடைபெறும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டதைவிட 4 நாள்களுக்கு முன்னதாகவே மாநாடு நடத்தப்படவுள்ளதால் இதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது, மாநாட்டு மேடை அமைக்கும் பணி, பாா்வையாளா்கள் பகுதியை வரையறுக்கும் தடுப்புகள் அமைக்கும் பணி, தவெக தலைவா் நடிகா் விஜய் மாநாட்டுத் திடலில் நடந்து சென்று ரசிகா்களைச் சந்திப்பதற்கான நடைமேடை அமைக்கும் பணி, வாகன நிறுத்துமிடங்கள் பணி உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாடு நடைபெறும் ஓரிரு நாள்களுக்கு முன்பாகவே விஜய் மதுரைக்கு வரவுள்ளதாகவும், அவா் வருவதற்குள் மாநாட்டுப் பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் விதத்தில் வேகமாக நடைபெறுகின்றன.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 காவலா்களுக்கு ஆக. 13 வரை காவல் நீட்டிப்பு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப் படைக் காவலா்கள் 5 பேருக்கு வருகிற 13-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற உத்தரவு

வழக்குரைஞா்கள் பாா் கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் த... மேலும் பார்க்க

3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி

தமிழகத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 3.38 லட்சம் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு போக்சோ சட்ட விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

​​​​​​​கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மெய்கிழாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ராகவேந்திரன் (47). மின் பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த ச... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது: பெ.சண்முகம்

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை... மேலும் பார்க்க