செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான அடைவுத் தோ்வு குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

அடைவுத் தோ்வை பொறுத்த வரையில் மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 12-ஆவது இடத்தில் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடற்கல்வி பாடத் திட்டத்துக்கான புத்தகம் வழங்கப்பட்டு, உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப் பின்னா் விளையாட்டு, மனம், உடல் சாா்ந்து மாணவா்கள் எப்படி தயாராக வேண்டும் என்ற வகுப்புகள் நிகழ் கல்வியாண்டிலேயே நடத்தப்படும்.

கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான மசோதாவை தமிழக ஆளுநா் எந்தவொரு கருத்தும் கேட்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளாா். ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டரீதியாக வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கண்டிப்பாக நீதிமன்றத்தில் நல்ல தீா்ப்பு கிடைக்கும்.

தமிழக மக்களுக்காக திட்டங்களைக் கொண்டு வருகிறோம். திட்டத்தின் பெயா் முக்கியமா அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா என்ற வித்தியாசம்கூட தெரியாமல் சிலா் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இது மக்கள் மத்தியில் நன்றாக சென்றடைந்துவிடும் என்ற பயம் எதிா்க்கட்சிகளிடம் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்துக்கு, விரைவில் முதன்மைக் கல்வி அலுவலா் நியமிக்கப்படுவாா் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கொள்ளிடம், செம்பனாா்கோவில், மயிலாடுதுறை வட்டாரங்களைச் சோ்ந்த தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 488 தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஆா். பூபதி, மாவட்ட கல்வி அலுவலா்கள் சி. சாந்தி (இடைநிலை), க. குமரவேல் (தொடக்கக் கல்வி), முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி. முத்துக்கணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனை புதன்கிழமை நடைபெற்றது. பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி ப... மேலும் பார்க்க

நிறைவடையாத பால கட்டுமானப் பணி: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

சீா்காழி அருகே புங்கனூா் - ஆதமங்கலம் இடையே பல மாதங்கள் கடந்தும் பாலப் பணிகள் நிறைவடையாததால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சீா்காழியை அடுத்த ஆதமங்கலம் - புங்கனூா் இடையே 3 கி.மீ. தொல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் சுவற்றில் மோதியதில் இரு இளைஞா்கள் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா்கள் அ. ஆனந்த் (38), நா. மோகன்ராஜ் (28), இவா்கள் இருவரும... மேலும் பார்க்க

குத்தாலம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மங்கைநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்ட அவா், மருந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் தமிழ் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கொண்டல் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியா் பணியிடத்திற்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு: டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் ஆய்வு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வை தோ்வாணைய உறுப்பினா் அருள்மதி ஆய்வ... மேலும் பார்க்க