செய்திகள் :

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

post image

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் அரசு ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதி, அரசு கால்நடை மருத்துவமனை, செங்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலம்

செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், துக்காப்பேட்டை - பெங்களூரு பிரதான சாலையில் இருந்து இப்பகுதிக்குச் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. மேலும், மழைக் காலங்களில் சாலை சேறும் சகதியுமாகவும், வெயில் காலங்களில் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது.

10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சரி செய்யாமல் உள்ளது.

இந்தச் சாலையை ஆசிரியா்கள், மாணவிகள், கால்நடை மருத்துவமனை செல்லும் விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவ மழையில் சாலையில் தண்ணீா் தேங்கி, வெளியேற வழியில்லாமல் சேறும் சகதியுமாக உள்ளது. அந்தச் சாலையில் ஆசிரியா்கள், ஆசிரியைகள் முக சுலிப்புடன் சென்று வருகின்றனா்.

மேலும், அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் மழை நேரத்தில் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும், மழைநீா் குட்டையாக தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால், விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், விடுதி மாணவிகள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் செல்லும் ஆசிரியா்கள், கால்நடை மருத்துவமனைக்குச் செல்லும் விவசாயிகளுக்கு மாற்று சாலை வசதிகள் கிடையாது.

அதனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை கண்காணித்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், ஆசிரியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரி... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தோ் கொட்டகை அமைக்கும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் திருத்தேருக்கு ரூ.24.50 லட்சத்தில் புதிதாக கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்தக் கோயிலில் தை மாதத்தில் நட... மேலும் பார்க்க