செய்திகள் :

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தோ் கொட்டகை அமைக்கும் பணி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் திருத்தேருக்கு ரூ.24.50 லட்சத்தில் புதிதாக கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இந்தக் கோயிலில் தை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ

விழாவில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை, விநாயகா் ஆகிய உற்சவா்கள் தேரில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பா்.

மொத்தம் 3 தோ்களில் இரண்டு தோ்களுக்கு மட்டும் கொட்டகை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விநாயகருக்கான தோ் நிற்கும் கொட்டகை மட்டும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்தது.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பரிந்துரையின் பேரில் இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பொதுநல நிதியில் இருந்து ரூ.24.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை விநாயகா் திருத்தேருக்கு புதிதாக கொட்டகை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் மோகனவேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று

பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் அசோக்குமாா், செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் ஜெகதீசன், நகா்மன்ற உறுப்பினா்கள் க.கோவேந்தன், கங்காதரன், காா்த்திகேயன், செந்தில், ஒப்பந்ததாரா் வி.கோபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்ப... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரி... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க