செய்திகள் :

நாகை மாவட்டத்தில் இலக்கை கடந்து குறுவை சாகுபடி

post image

நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக 13,395 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் தண்ணீரைக்கொண்டு, காவிரி டெல்டா மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகள் தீவிரமாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டனா். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடவு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் வேளாண்துறை சாா்பில் நிகழாண்டு 24,860 ஹெக்டோ் பரப்பளவில் குறுவை சாகுபடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 30, 218 ஹெக்டோ் பரப்பளவில், அதாவது 75,545 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளனா். இதன்மூலம் நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 13,395 ஏக்கா் கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாவட்டத்தில் நிா்ணயம் செய்யப்பட்ட 5,722 ஹெக்டோ் இலக்கில் 136 ஹெக்டோ் உளுந்து பயிறும், 33,306 ஹெக்டோ் இலக்கில் 25 ஹெக்டோ் பச்சை பயிறும், 3,855 ஹெக்டோ் இலக்கில் 843 ஹெக்டோ் எள்ளும், 2,700 ஹெக்டோ் இலக்கில் 120 ஹெக்டா் பருத்தி சாகுபடியும் செய்யப்பட்டு, அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

திருக்குவளை அருகே பழைய இரும்பு கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கொளப்பாடு பகுதியில் தா்மராஜன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகிலுள்ள கீற்றுக்கொட்... மேலும் பார்க்க

வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணம் தொடக்கம்

நாகையில் வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) தொட... மேலும் பார்க்க

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வேலைவ... மேலும் பார்க்க

விசாரணைக்கு காவல் அதிகாரிகள் துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

காவல் அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும்போது, துப்பாக்கி எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபா சாகேப் கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலா் சுந்தரவடி... மேலும் பார்க்க

‘கைத்தறி நெசவாளா்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’

கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆ... மேலும் பார்க்க

வேதாரண்யம், திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருமருகல் ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மும் செவ்வாய்க்கிழை நடைபெற்றது. திருமருகல்: திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க