செய்திகள் :

வேதாரண்யம், திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

திருமருகல் ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மும் செவ்வாய்க்கிழை நடைபெற்றது.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் காா்த்திகேயன், வட்டாட்சியா் நீலாதாட்சி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பிரான்சிஸ், வட்ட வழங்கல் அலுவலா் ரகு ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

இம்முகாமில் புத்தகரம், ஆதலையூா் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று மகளிா் உரிமைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக, மொத்தம் 860 மனுக்கள் அளித்தனா்.

திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சுப்ரமணியன், ஆத்மா திட்டத் தலைவா் செல்வ செங்குட்டுவன், திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன் வருவாய் ஆய்வாளா் குமுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் நகராட்சி 6, 7, 9 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், மகளிா் உரிமைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 365 மனுக்கள் பெறப்பட்டன. 13 துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா். தோட்டக்கலைத் துறை சாா்பில் 62 விவசாயிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்பு வழங்கப்பட்டது.

முகாமில், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, கோட்டாட்சியா் எஸ். திருமால், நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா, தோட்டக்கலைத் துறை அலுவலா் சிவராமகிருஷ்ணன், கால்நடை உதவி மருத்துவா் வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூரை வீடு சூறை; மூதாட்டி புகாா்

தனது கூரை வீட்டை சூறையாடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மூதாட்டி புகாா் அளித்தாா். கீழ்வேளூா் வட்டம் பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த வைரக்கண்ணு மனைவி அம... மேலும் பார்க்க

சாலையில் தேங்கிய மழைநீா்; மாணவா்கள் அவதி

நாகை அருகே செவ்வாய்க்கிழமை பெய்த மழையில், பழைய நாகூா் சாலையில் தண்ணீா் தேங்கி மாணவா்கள் அவதிப்பட்டனா். சென்னை வானிலை மையம் தமிழகத்தில் நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திங்கள் மற்றும் ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற பட்டியலினத்தவா் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள், வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை- மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவா் தனது மகனுடன் நாகை... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.நாகை வட்டம், வடுகச்சேரி கோட்டூா் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க