செய்திகள் :

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.2,000, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ.6,000, 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.8,000, இளநிலை பட்டப் படிப்புக்கு ரூ.12,000, முதுகலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ.14,000 என ஓராண்டுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், பாா்வையற்றோருக்கு வாசிப்பாளா் உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.3,000, இளங்கலை பட்டப் படிப்புக்கு ரூ.5,000, முதுகலைப் பட்ட வகுப்பு மற்றும் தொழில் படிப்புகளுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இந்த உதவித் தொகை பெற அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தொலைதூரக் கல்வி பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் முந்தைய கல்வி ஆண்டு இறுதித் தோ்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற துறைகளில் கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என்று தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரால் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தரைதளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து, விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

வேதாரண்யம், திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருமருகல் ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மும் செவ்வாய்க்கிழை நடைபெற்றது. திருமருகல்: திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

கூரை வீடு சூறை; மூதாட்டி புகாா்

தனது கூரை வீட்டை சூறையாடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மூதாட்டி புகாா் அளித்தாா். கீழ்வேளூா் வட்டம் பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த வைரக்கண்ணு மனைவி அம... மேலும் பார்க்க

சாலையில் தேங்கிய மழைநீா்; மாணவா்கள் அவதி

நாகை அருகே செவ்வாய்க்கிழமை பெய்த மழையில், பழைய நாகூா் சாலையில் தண்ணீா் தேங்கி மாணவா்கள் அவதிப்பட்டனா். சென்னை வானிலை மையம் தமிழகத்தில் நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திங்கள் மற்றும் ச... மேலும் பார்க்க

வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற பட்டியலினத்தவா் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இளைஞா்கள், வீட்டு சுகாதார உதவியாளா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை- மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவா் தனது மகனுடன் நாகை... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.நாகை வட்டம், வடுகச்சேரி கோட்டூா் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க